spot_img
HomeNewsமனதை வருடும், மண் மணக்கும் காவியம் “சியான்கள்” விரைவில் !

மனதை வருடும், மண் மணக்கும் காவியம் “சியான்கள்” விரைவில் !

K L Productions சார்பில் G.கரிகாலன் தயாரித்துள்ள படம் “சீயான்கள்”.  இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார்.

வயது முதிர்ந்த, நம் கிராமத்து முதயவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, நம் மண் மனம் மாறமல் கூறும் படமாக

உருவாகியுள்ளது. மண் சார்ந்த கதைகள் அருகி வரும் காலத்தில் இப்படம் நம் கிராமத்து அழகியலை மீட்டெடுத்து, நம் மீது மண்

வாசத்தை,  அன்பை தெளிக்கும் படைப்பாக இருக்கும்.

கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்ள்.விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இனறு நடந்தது.

 இயக்குநர் வைகறை பாலன் கூறியதவாது….வயதான அப்பா, அம்மா நம் எல்லோருக்கும் இருப்பார்கள் அவர்களை நாம் எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்பதை நம் கிராமத்து மண் சார்ந்து கூறும் படைப்பாக சீயான்கள் படம்  இருக்கும். இப்படத்தில்  உண்மையில் நடந்த பல சம்பவங்கள் தொகுத்து அதனை கதையில் சேர்த்திருக்கிறேன். சீயான்கள் கிராமத்து பக்கம் முதியவர்களை அழைக்கும் ஒரு வழக்கு சொல். இப்படம் முதயவர்களின்

வாழ்வை அவர்கள் பார்வையில் சொல்வதால் இந்தத் தலைப்பை வைத்தோம். உறவுகளை தூர வைத்து விட்டு இன்ஷியலை மட்டும்

கூடயே  வைத்துக்கொள்கிறோம். அன்பையும் பாசத்தையும் மறந்து விட்ட காலத்தில் வாழ்கிறோம். முதியவர்கள் வாழ்வில்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், இச்சை இருக்கும்.  இப்படம்  ஏழு முதியவர்களின்  பார்வையில் அவர்களது

ஆசையை கூறும் படம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை வயதனாவர்கள் நடத்தினால் எப்படி இருக்கும் அது தான் படம். இப்படம்

இளைஞர்களுக்கும் பிடிக்கும் அவர்களுக்கும் பாட்டி, தாத்தா இருக்கிறார்கள் அல்லவா. இப்படம் இடுப்புக்கு கீழ் உள்ளவர்களுக்கான

படம் இல்லை. இடுப்புக்கு மேல் உள்ளவர்களுக்கான படம் என்பதை  பகிரங்கமாக சொல்கிறேன். கடிகார மனிதர்களுக்கு பின்  இப்படம்

செய்திருக்கிறேன். அப்படத்தை போல இந்தப்படத்திற்கு ஆதரவு அளியுங்கள் நன்றி எனறார்.

 தயாரிப்பாளர் , நாயகன் கரிகாலன் பேசியதாவது….

இந்தப்படத்தில் நான் நாயகன் இல்லை. ஒரு கதாப்பாத்திரமாக தான் நடித்திருக்கிறேன். என் மனைவியின் உந்துததால் தான் இப்படம்

நடந்தது. எல்லோரும் வாழ்க்கையில் ஒரு நிலையை அடைந்த பிறகு அவர்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணம்

இருக்கும். என் மனைவி என் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். முழுப்படமும் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியிட

இருக்கிறோம் ஆதரவளியுங்கள் நன்றி என்றார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

இயக்கம் – வைகறை பாலன்

இசை – முத்தமிழ்

ஒளிப்பதிவு – பாபு குமார் I.E

கலை – ரவீஸ்

படத்தொகுப்பு – மப்பு ஜோதி பிரகாஷ்

பாடல்கள் – முத்தமிழ், வைகறை பாலன்

ஒலி வடிவமைப்பு – G. தரணிபதி

புகைப்படம் – S.P. சுரேஷ்

நடன இயக்குநர் – அப்சர்

சண்டைப்பயிற்சி – PC

விளம்பர வடிவமைப்பு – சபீர்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா

தயாரிப்பு மேற்பார்வை பேச்சிமுத்து

இணை தயாரிப்பு – லில்லி கரிகாலன்

தயாரிப்பு – G கரிகாலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img