spot_img
HomeNewsநடிகர் அவதாரம் எடுத்திருக்கும் ஜேஎஸ்கே

நடிகர் அவதாரம் எடுத்திருக்கும் ஜேஎஸ்கே

‘தரமணி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஜேஎஸ்கே, மம்மூட்டி நடித்த ‘பேரன்பு’ படத்தில் கெளரவ வேடமொன்றில் நடித்திருந்தார். தற்போது அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் பிரதான வேடங்களில் நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் வலுவான பாத்திரமொன்றில் நடித்து வருகிறார்.


இயக்குநர் நவீன் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் நடிக்க அணுகியபோது, கதையிலும் தன் பாத்திரப் படைப்பிலும் வெகுவாக கவரப்பட்ட ஜேஎஸ்கே இப்போது அப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த பெரும்பாலான காட்சிகள், படத்தில் நடிக்கும் பிரதான பாத்திரங்களுடன் ரஷ்யாவில் படமாக்கப்பட்டன.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சிவா தயாரிக்கும் ‘அக்னி சிறகுகள்’ படத்துடன், சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’, ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றிலும் நல்ல வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கும் நிலையில், தனக்கு முக்கியத்துவமுள்ள நல்ல வேடங்களை ஏற்று நடிக்க முடிவு செய்திருக்கிறார் ஜேஎஸ்கே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img