spot_img
HomeNewsகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான `திருமணம்தொடர்˜ புதிய அத்தியாயங்களுடன் மீண்டும் ஒளிபரப்பாகிறது

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான `திருமணம்தொடர்˜ புதிய அத்தியாயங்களுடன் மீண்டும் ஒளிபரப்பாகிறது

சென்னை, ஜூலை 15-

ஊரடங்கு காலத்தில் தமிழ் பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு நிறைந்த அற்புதமான நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இந்த தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொடரான திருமணம் தொடர் அடுத்த வாரம் ஜூலை 20-ந்தேதி திங்கள் முதல் புத்தம்புது பொலிவுடன், புதிய அத்தியாயங்களுடன் பல்வேறு திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த தொடராக ஒளிபரப்பாக உள்ளது. அதேபோலே ஓவியா மற்றும் உயிரே போன்ற தொடர்களும் பார்வையாளர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் ஒளிபரப்பாகின்றன.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்˜-

ஓவியா – திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணி

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மெகா ஹிட் தொடரான ஓவியா இந்த வார துவக்கத்தில் 400 அத்தியாயங்களை தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த தொடர் அனைவரிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடராகும். சரவணனுடன் தான் செய்து கொண்ட திருமணத்தின் பின்னணியில் உள்ள உண்மை குறித்து ஓவியா தெரிந்து கொள்கிறாள். இந்த நிலையில் இந்த தொடர் ஒரு புதிய பயணத்தில் பரிணமிக்கிறது. அவளுக்கும் சூர்யாவுக்கும் இடையிலான உறவை வசீகரனும் சரவணனும் சந்தேகிக்கக் தொடங்கியதால் இருவரது வாழ்க்கையிலும் எதிர்பாராத பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த சிக்கல்களில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வந்தார்கள் என்பதை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை நாள்தோறும் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஓவியா தொடரை பாருங்கள்.

அம்மன் – திங்கள் முதல் சனி வரை இரவு 8.00 மணி

அம்மன் மீது அதீத பக்தி கொண்ட சக்தி என்ற பெண், நீதிபதி உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்கிறாள். சங்குலிங்கத்தின் சதி திட்டத்திலிருந்து அவரை காப்பாற்ற அம்மனிடம் அவள் பிரார்த்தனை செய்கிறாள்.சக்தியின் கடும் பிரார்த்தனையின் காரணமாக பார்வதி தனது கணவரை மீட்டாரா? இல்லையா? என்பதை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் அம்மன் தொடரை பாருங்கள்.

இதயத்தை திருடாதே – திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணி

சகானாவும் சிவாவும் இருவேறு துருவங்களாக இருக்கிறார்கள். எதிரிகளாக இருந்த அவர்கள் வாழ்க்கை துணைவர்களாக மாறுகிறார்கள். இந்த நிலையில் பவானியுடன் ஏற்பட்ட சண்டைக்கு பின் நீலகண்டன் காணாமல் போய் விடுகிறார். நீலகண்டனை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனரா? என்பதை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே தொடரை பாருங்கள்.

மாங்கல்ய தோஷம் – திங்கள் முதல் சனி வரை இரவு 9.00 மணி

தருண் நித்யாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆறுமுகத்திடம் கூறுகிறார். அதற்கு ஆறுமுகம் மறுத்தபோதிலும்,  நித்யாவை திருமணம் செய்வதில் தருண் பிடிவாதமாக இருக்கிறார். இதற்கிடையே ரகுவரன் நித்யாவை திருமணம் செய்ய ஒரு மகத்தான திட்டத்தை வகுக்கிறான். இந்த நிலையில் தருணிடம் இருந்து நித்யாவை  திருமணம் செய்யத் துடிக்கும் ரகுவரனின் திட்டம் நிறைவேறுமா? நித்யா மற்றும் தருண் ஆகியோரின் தலைவிதி என்ன? என்பதைக் காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் மாங்கல்ய தோஷம் தொடரை பாருங்கள்.

உயிரே – திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணி

செழியனும் பவித்ராவும் தங்கள் வாழ்க்கையை துவங்குகையில், பவித்ரா மீதான நரேனின் காதல் வலுவடைகிறது. இந்த நிலையில், நரேன் பிறந்த நாள் அன்று பவித்ராவும் நரேனும் நேருக்கு நேர் சந்திப்பதை தடுக்க செழியன் தந்திரம் செய்கிறான்.  இதற்கிடையே சுந்தரபாண்டி கையில் ஒரு பைலுடன் வருகிறார். அது அந்த முழுக் குடும்பத்தையும் திடுக்கிட வைக்கிறது. மறைக்கப்பட்ட பவித்ராவின் உண்மையை சுந்தரபாண்டி வெளியே சொல்கிறாரா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் உயிரே தொடரை பாருங்கள்.

திருமணம் – திங்கள் முதல் சனி வரை இரவு 10.00 மணி

Must Read

spot_img