HomeNews‘அந்த நாள்’- சைக்கோவை விட சிறந்த படம்! - ஆர்யன் ஷ்யாம்

‘அந்த நாள்’- சைக்கோவை விட சிறந்த படம்! – ஆர்யன் ஷ்யாம்

தமிழ் சினிமாவில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்ந்து இருந்தது, ஏவிஎம் நிறுவனம். அந்த நிறுவனத்தின் ஏவிஎம் சரவணனின் பேத்தியான அபர்ணாவை திருமணம் செய்துகொண்டவர், ஆர்யன் ஷியாம். இவர் தற்போது ’அந்த நாள்’ என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். இதுகுறித்தும் மிஷ்கின் உடனான சர்ச்சைகள் குறித்தும் கூறியதாவது…

“நானே கதை வசனம் எழுதி தயாரித்து நடித்துள்ள படம் ’அந்த நாள்’. இப்படம் நரபலி மற்றும் பில்லி சூனியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சென்சார் தர மறுத்துவிட்டனர். பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்டு நடிகை கௌதமி பார்த்துவிட்டு படத்தைப் பாராட்டியுள்ளார். பல்வேறு கட்டுகளுடன் படத்தை ஏ சான்றிதழுடன் வெளியிட அனுமதி அளித்தார்.

மேலும், மிஷ்கினின் ’சைக்கோ’ படத்தில் நான் நடிக்க வேண்டியது. பல்வேறு காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அப்படத்திற்கு நான் அளித்த ஒரு கோடி ரூபாய் பணத்தை மிஷ்கின் தற்போது திருப்பி கொடுத்துவிட்டார். மீண்டும் வாய்ப்பு இருந்தால் அவர் படத்தில் நடிப்பேன்.

ஏவிஎம் நிறுவனம் பாரம்பரியமிக்கது. அதனால் நரபலி தொடர்பான இப்படம் ஏவிஎம் பெயரில் வெளியாகாது. ‘கிரீன் மேஜிக் என்டர்டெர்டெய்ன்மென்ட்’ என்ற நிறுவனத்தின் பெயரில் வெளியாகும்.

இப்படம் நரபலி தொடர்பான படம் என்பதால் கர்ப்பிணி பெண்கள், இதயம் பலவீனமானவர்கள் இப்படத்தை தயவு செய்து பார்க்க வேண்டாம். இதுமாதிரியான  ஹாலிவுட் படங்களை அதிகம் பார்க்கும் ரசிகர்களுக்கு ’அந்த நாள்’ திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்’என்றார்.

Must Read

spot_img