spot_img
HomeNewsபட்ட அவமானம் போதாதா ? மீண்டும் கூப்பிட்டால் போக வேண்டுமா ? விஜய் எடுத்த முடிவு

பட்ட அவமானம் போதாதா ? மீண்டும் கூப்பிட்டால் போக வேண்டுமா ? விஜய் எடுத்த முடிவு

தளபதி விஜய் லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன்பே அதாவது அஜித் வெங்கட்பிரபு டைரக்ஷனில் மங்காத்தா படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்த அந்த சமயத்திலேயே அவரது டைரக்ஷனில் விஜயும் நடிப்பதாக இருந்தது. ஆனால் பல காரணங்களால் அது தள்ளி போய் இத்தனை வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

இந்தப் படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை தெலுங்கு திரையுலக சேர்ந்த குறிப்பாக ஆர்ஆர் படத்தை தயாரித்த டிவிவி நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாகவும் இதற்காக விஜய் இதுவரை வாங்கிய சம்பளத்தை விட அதிகமாக தர இருக்கிறார்கள் என்றும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

கடந்த வருடம் வெளியான வாரிசு திரைப்படத்தையும் தெலுங்கு திரையுலக சேர்ந்து பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு என்பவர் தான் தயாரித்தார். படம் வெளியாவதற்கு முன்பு விஜயை பற்றி ஆகா ஓகோ என புகழ்ந்து பேசிய அவர் படம் சரியாக போகவில்லை என்றதுமே விஜயை கிண்டல் அடிக்கும் விதமாக பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார்.

இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் இனிமேல் தெலுங்கு தயாரிப்பாளர்களே வேண்டாம் என சோசியல் மீடியாவில் கொந்தளித்தனர். இந்த நிலையில் தான் விஜய் மீண்டும் தெலுங்கு பட தயாரிப்பாளரின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி விஜய் ரசிகர்களை கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

Must Read

spot_img