spot_img
HomeNewsகேட்காத காதுக்கு இவ்வளவு அலங்காரமா ? பிரபல நடிகரின் மகன் படத்தில் நடக்கும் கூத்துக்கள்

கேட்காத காதுக்கு இவ்வளவு அலங்காரமா ? பிரபல நடிகரின் மகன் படத்தில் நடக்கும் கூத்துக்கள்

நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் நுழைந்து ஆதிக்கம் செலுத்துவது காலம் காலமாக தொடர்ந்து வரத்தான் செய்கிறது. அதில் ஒரு சிலர் மட்டுமே சாதிக்கிறார்கள். பலர் வரட்டு கவுரவத்திற்காக பல கோடிகளை செலவு செய்து தங்கள் தந்தை சேர்த்து வைத்த சொத்துக்களை காலி செய்துவிட்டு தாங்களும் காணாமல் போகிறார்கள்.

எல்லோரும் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வேண்டும் என்றுதான் காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆனால் வைக்கும்போதே அகலக்கால் வைப்பதால் தான் பல பேர் காணாமல் போய்விடுகின்றனர். நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி நடித்து வரும் படம் பற்றிய தகவல்களை கேள்விப்படும்போது இப்படித்தான் தோன்றுகிறது.

நடிகர் முரளியின் மகன் அதர்வா ஒரு நடிகராக சினிமாவில் களமிறங்கிய போது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அவரும் ஓரளவிற்கு நல்ல படங்களை நடித்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இருந்தார். அப்படிப்பட்டவருக்கே இன்னும் ஒரு மிகப்பெரிய வெற்றி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அவரது தம்பி ஆகாஷும் சினிமாவிற்கு நடிக்க வந்திருக்கிறார். அண்ணனுக்கு முன்னதாகவே திருமணமும் செய்து கொண்ட ஆகாஷ் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளைத்தான் திருமணம் செய்து இருக்கிறார். தற்போது மாமனார் தயாரிக்கும் படத்திலேயே நடித்தும் வருகிறார்.

ஆரம்பம் பில்லா என அஜித்தின் படங்களை இயக்கிய அவரது ஆஸ்தான இயக்குனராக மாறிய விஷ்ணுவர்தன் தான் இந்த படத்தை இயக்கிய வருகிறார். ஆரம்பத்தில் 17 கோடிக்குள் தயாராகும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு புதுமுக ஹீரோவுக்கு இவ்வளவு காசே மிக அதிகம் என்று சொல்லப்பட்ட நிலையில் தயாரிப்பு செலவு பின்னர் 25 கோடியை தொட்டு இப்போது 30 கோடியையும் தாண்டி விட்டது என்கிறார்கள்.

ஆஹா ஓஹோ என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர் பெரிய ஹீரோவாக வருவாரா என்று தெரியாது. ஆனால் எதற்காக இவ்வளவு காசை கொட்டுகிறார்கள் என்று தெரியவில்லை என படக்குழுவினரே புலம்பி வருகிறார்கள். இதை பார்த்துவிட்டு கேட்காத காதுக்கு எதற்கு இவ்வளவு அலங்காரம் என திரை உலகில் உள்ளவர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Must Read

spot_img