spot_img
HomeNewsவிஜயகாந்த் மரணத்தை அஜித் விசாரிக்காததற்கு இதுதான் காரணம் ; கம்பி கட்டும் கதை சொல்லும் முன்னாள்...

விஜயகாந்த் மரணத்தை அஜித் விசாரிக்காததற்கு இதுதான் காரணம் ; கம்பி கட்டும் கதை சொல்லும் முன்னாள் பிஆர்ஓ

நடிகர் விஜயகாந்த் மரணம் அடைந்த சமயத்தில் யார் யார் அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்பதையும் யார் ஒரு இரங்கல் அறிக்கை கூட வெளியிடவில்லை என்பதையும் தமிழக மக்கள் கூர்ந்து கவனித்து வந்தார்கள். அந்த வகையில் நடிகர் அஜித் விஜயகாந்த் மரணத்தின் போது வெளிநாட்டில் இருந்தாலும், அங்கிருந்து ஒரு இரங்கல் செய்தியோ அல்லது ஒரு அறிக்கையோ வெளியிடவில்லை.

சென்னை வந்த பிறகு அவரது நினைவிடத்திற்கு சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தவுமில்லை.. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் சொல்லவில்லை. ஆனால் சமீபத்தில் இறந்த அவரது நண்பர் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த, துக்கம் விசாரிக்க அவரது வீட்டிற்கு தனது குடும்பத்துடன் சென்று வந்தார் அஜித்.

இது நிச்சயமாக விமர்சனங்களை ஏற்படும் என்ற நிலையில் அதேபோல பலரும் அஜித்தின் இந்த செயல் குறித்து கடுமையான விமர்சனங்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தின் முன்னாள் பி ஆர் ஓ ஆக பணியாற்றி வந்த விகே சுந்தர் என்பவர் அஜித் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாதது குறித்து ஒரு வித்தியாசமான கம்பி கட்டும் கதையை காரணமாக கூறியுள்ளார்.

அதாவது அஜித்தை பொருத்தவரை யாராவது ஒருவர் தன்னை இதை செய்ய வேண்டும் என வற்புறுத்தினால் அதை ஒருபோதும் பண்ண மாட்டாராம். அதேபோல எந்த இறப்புக்கு போக வேண்டும் போகக்கூடாது என்பது அவருடைய முடிவு அதை எப்படி ஒருவர் கட்டாயப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.

விஜயகாந்த் மறைவிற்கு போய் துக்கம் விசாரியுங்கள் என யாரும் அஜித்தை கட்டாயப்படுத்தவில்லை. ரஜினி, விஜய் இவர்கள் வந்தபோது அஜித் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுந்தது. வெளிநாட்டில் இருப்பதால், சரி ஒரு இரங்கல் அறிக்கையாக கொடுத்திருக்கலாமே என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். இதுதான் சோசியல் மீடியாவில் வெளியானது.

இவர்கள் இப்படி கூறியதால் தான் விஜயகாந்த் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க அஜித் செல்லவில்லை என்று சொல்வது அஜித் செய்த முட்டாள்தனத்தை விட இரண்டு மடங்கு முட்டாள்தனமான கருத்தாக இருக்கிறது.

நீர்நிலை சாவுகள் குறித்து பாக்கியராஜ் பேசியதால் புது வடிவில் கிளம்பிய பிரச்சனை

இயக்குனர் பாக்கியராஜ் சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் வைத்து நடத்தி வருகிறார். அதன் மூலமாக அவபோது சில சமூக விழிப்புணர்வு செய்திகளையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பவானி அருகே உள்ள ஒரு கோவில் அருகில் உள்ள ஆற்றில் அவ்வப்போது பலர் குளிக்க சென்ற சமயத்தில் ஆற்றில் உள்ள பாறை இடுக்குகளில் சிக்கி உயிரிழந்ததாக கூறியுள்ளார்.

ஆனால் அவர்களது மரணம் இயற்கையானது அல்ல என்றும் அங்குள்ள சிலர் பணத்திற்காக இப்படி ஆற்றில் குளிக்கும் சிலரை தண்ணீருக்குள் இழுத்து அங்குள்ள பாறை இருக்குகளின் சிக்கவைத்து கொலை செய்கின்றனர் என்றும் பின்னர் அவர்களை தேடுவது போல நடித்து இறந்து போன குடும்பத்தாரிடம் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதிக்கின்றனர் என்றும் நான் கேள்விப்பட்டதுண்டு என்கிற ஒரு தகவலை தற்போது கூறியுள்ளார்.

இவர் கூறிய இந்த செய்தி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே வாட்ஸ் அப்பில் வலம் வந்த செய்தி தான்.. இப்போது ஏனோ தெரியவில்லை பாக்கியராஜ் இதை கூறியுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரி அப்படி எதுவும் எங்கள் பகுதியில் இது போன்ற கொலை நடந்ததாக வழக்கு பதிவாகவில்லை. பாக்கியராஜ் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புகிறார் என்று விளக்கம் அளித்துள்ளார்.

அது மட்டுமல்ல அந்த பகுதியைச் சேர்ந்த மஸ்தான் என்பவர் பாக்யராஜ் மீது இப்படி பேசியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க என்றோ நடந்த ஒரு சம்பவத்தை இப்படி பாக்கியராஜ் போன்ற பிரபலங்கள் பேசியதால் அது தமிழக அளவில் கவனம் பெற்றுள்ளது.

அதே சமயம் இதுபோன்று தங்களது உறவுகளை இந்த ஆற்றில் பறிகொடுத்த குடும்பத்தினரும் இப்படித்தான் நடந்திருக்குமோ என்று மீண்டும் தாங்க முடியாத துயரத்திற்கு ஆளாகி இருப்பார்கள். இன்னொரு பக்கம் இது போன்ற மரணங்களில் தேடுதலில் இறங்கி சம்பந்தப்பட்ட சடலங்களை மீட்டு வந்த நபர்கள் மீது தான் தற்போது அனைவரின் சந்தேகமும் ஒன்றாகத் திரும்பும்.

ஒருவேளை இது ஏதேச்சையாக நடந்து அவர்களும் இப்படி இதை கண்டுபிடித்து தந்திருந்தால் கூட பாக்கியராஜ் கூறியதை வைத்து பார்க்கும் போது இந்த மரணத்தின் பின்னணியில் இப்படி தேடுதல் நடத்தியவர்கள் தான் இருந்திருப்பார்களோ என சில குடும்பத்தாருக்கு சந்தேகம் வரும்.

இதனால் சம்பந்தப்பட்ட தேடுதல் வேட்டை நடத்திய நபர்களுக்கும் பிரச்சனைகள் வரலாம். இனி இது போன்று நிஜமாகவே யாராவது ஒருவர் ஆற்றில் மூழ்கி இறந்தால் கூட அவரது உடலை கண்டுபிடித்து மீட்பதற்கு இது போன்ற தேடுதலுக்கு ஆண்களை அழைத்தால் வர தயங்குவார்கள். இது போன்ற புதிய பிரச்சனைகளை பாக்யராஜின் இந்த வீடியோ கிளப்பி வைத்துள்ளது.

Must Read

spot_img