spot_img
HomeNewsபாபி சிம்ஹாவிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே சூர்யா

பாபி சிம்ஹாவிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே சூர்யா

நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள படம் ரஸாக்கர். இந்த படத்தை யாத சத்யநாராயணா என்பவர் இயக்கி உள்ளார். படத்தில் மகரந் தேஷ்பாண்டே, ராஜ் அருண் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தெலுங்கில் உருவாகியிருந்தாலும் இந்த படம் ஹிந்தி மற்றும் தமிழிலும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஹிந்தி பதிப்பு டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை கங்கனா ரணவத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளும் துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் எஸ்.ஜே சூர்யா கலந்து கொள்வதாக இருந்து, அவரது போஸ்டர்களும் விழா அரங்கில் இடம் பெற்றிருந்தன.

அதே சமயம் எஸ்.ஜே சூர்யா இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை என்பது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் எஸ்.ஜே சூர்யா.

இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புள்ள தம்பி சிம்ஹா.. எனக்கு ஏற்பட்டுள்ள கடுமையான வைரல் காய்ச்சல் காரணமாக என்னால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாததற்கு மிக மிக வருத்தம் தெரிவிப்பதுடன் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய ரஸாக்கர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கு தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Must Read

spot_img