spot_img
HomeNewsதனுஷின் ஐம்பதாவது படத்தில் என் லிமிட் இதுதான் ; சந்தோசத்தில் செல்வராகவன்

தனுஷின் ஐம்பதாவது படத்தில் என் லிமிட் இதுதான் ; சந்தோசத்தில் செல்வராகவன்

நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 23 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது தனது ஐம்பதாவது படத்தில் வருகிறார். ராயன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை தனுஷே இயக்கியும் வருகிறார். தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவனும் இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

அதனால் இந்த படத்திற்கான கதையையும் இயக்குனர் செல்வராகவன் தான் எழுதியுள்ளார் என்று சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவத் துவங்கியது. இதனை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இயக்குனர் செல்வராகவன், “இந்த படத்தில் நான் ஒரு நடிகர் கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கிறேன். இது தனுஷ் பல வருடங்களாக அவர் மனதுக்குள்ளேயே வைத்திருந்த அவருடைய கனவு கதை. அதனால் இந்த படத்திற்கான மொத்த பொறுப்பும் அவருக்குத்தான். இதில் நான் வெறும் நடிகன் மட்டுமே. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார்.

அந்த வகையில் தனுஷின் முதல் படத்தில் ஒரு இயக்குனராக செல்வராகவனும் இருந்தார். அவரது ஐம்பதாவது படத்திலும் ஒரு நடிகராக செல்வராகவன் இருக்கிறார்.

Must Read

spot_img