spot_img
HomeNewsஆரம்பத்தில் பேசிவிட்டு பின்னாளில் குற்ற உணர்ச்சியுடன் கூனிக்குறுகிய அருண் விஜய்

ஆரம்பத்தில் பேசிவிட்டு பின்னாளில் குற்ற உணர்ச்சியுடன் கூனிக்குறுகிய அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் மூத்த நடிகர் ஆன விஜயகுமாரின் ஒரே ஆண் வாரிசு. விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகளுக்கும் அனிதா, கவிதா மற்றும் வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என மொத்தம் ஐந்து பெண் குழந்தைகள். இதில் வனிதா மட்டும் குடும்பத்தினருடன் சண்டை போட்டுவிட்டு தனியாக வாழ்கிறார். மற்ற நான்கு சகோதரிகளும் இரண்டு தாயார்களுக்கு பிறந்தவர்கள் என்றாலும் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர்.

இதில் சமீபத்தில் அனிதாவின் மகளுக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தனது சகோதரி அனிதா பற்றி நடிகர் அருண் விஜய் சமீபத்தில் கூறும்போது, “அனிதா டாக்டருக்கு படித்து வரும்போது அவரை ஒரு நபர் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்துள்ளார். இது குறித்து எங்களிடம் அனிதா கூறினார். அப்போது நானும் இன்னொரு சகோதரி கவிதா உள்ளிட்ட உறவினர்களும் சென்று அந்த நபரை எச்சரித்தோம்.

அதன்பிறகு சில நாட்கள் கழித்து பார்த்தால் அனிதாவும் அந்த நபரும் ஒரு ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தபோது எங்களுக்கு வேண்டிய ஒரு நபர் மூலமாக தகவல் தெரிந்து மீண்டும் அங்கே சென்று சத்தம் போட்டோம். அப்போது தாங்கள் இருவரும் நட்பாக பழகுவதாக அவர் கூறினார்/ அனிதாவும் அவரை காதலிப்பதாக பின்னர் தான் தெரியவந்தது. எப்படியோ பிடிவாதமாக நின்று அவரையே திருமணம் செய்து கொண்டார் அனிதா.

அதன் பிறகு அவர் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் மாப்பிள்ளையை பார்க்கும் போதெல்லாம் அந்த சமயத்தில் தேவையில்லாமல் பிரச்சினை செய்து விட்டோமே என்று ஒவ்வொரு முறையும் நினைத்து கொஞ்சம் கூனிக் குறுக வேண்டிய நிலை மற்றும் எனது குடும்பத்தாருக்கும் ஏற்பட்டது. இப்போது அது சரியாகி விட்டது” என்று கூறியுள்ளார்.

Must Read

spot_img