spot_img
HomeNewsஅனுஷ்காவிற்காக பிரபல ஹீரோவை ஒதுக்கி வைத்துவிட்டு ஓடி வந்த இயக்குனர்

அனுஷ்காவிற்காக பிரபல ஹீரோவை ஒதுக்கி வைத்துவிட்டு ஓடி வந்த இயக்குனர்

பாகுபலி படத்தின் இரு பாகங்கள் வெளியான சமயத்தில் நயன்தாராவை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் நடிகை அனுஷ்கா. இவரது சிரிப்புக்கே பல ரசிகர்கள் அடிமை என்று சொல்லலாம். ஆனால் அதன்பிறகு ஒரு படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை கூட்டி பின்னர் அதை குறைக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டார். இதனால் சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதை தொடர்ந்து தற்போது தனது ஐம்பதாவது படமாக சீலாவதி என்கிற படத்தில் நடிக்க துவங்கியுள்ளார் அனுஷ்கா.

இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் கிரிஷ் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு அனுஷ்கா நடித்த வேதம் என்கிற படத்தை இயக்கியவர். அந்த படத்தில் அனுஷ்கா ஒரு விலைமாது கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

அதனால் தான் தனது ஐம்பதாவது படத்தை இயக்கும் வாய்ப்பை இவருக்கு கொடுத்துள்ளார் என்று தெரிகிறது. அதே சமயம் இந்த இயக்குனர் கிரிஷ் கடந்த மூன்று வருடங்களாக தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாணை வைத்து ஹரிஹர வீரமல்லு என்கிற வரலாற்று படத்தை இயக்கி வருகிறார்.

பவன் கல்யாண் இந்த படத்தில் நடிப்பதை இழுத்தடித்து வருவதால் இன்னும் படப்பிடிப்பு முடிவடையாமல் இருக்கிறது. இந்த நிலையில் அனுஷ்கா படத்தை இயக்கும் வாய்ப்பு தேடி வந்ததால் பவன் கல்யாண் படத்தை அப்படியே பாதியிலேயே விட்டுவிட்டு இந்த படத்தை இயக்க ஓடி வந்து விட்டார்.

Must Read

spot_img