spot_img
HomeNewsஅப்ப கூட மக்களுக்கு நன்றி சொல்ல மாட்டீங்க.. நயன்தாராவை வறுக்கும் நெட்டிசன்கள்

அப்ப கூட மக்களுக்கு நன்றி சொல்ல மாட்டீங்க.. நயன்தாராவை வறுக்கும் நெட்டிசன்கள்

நடிகை நயன்தாரா 20 வருடங்களுக்கு மேலாக திரை உலகில் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து முன்னணி நடிகை இடத்திலேயே இருந்து வருகிறார். ஒரு பக்கம் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டு இன்னொரு பக்கம் கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார். திருமணம் செய்து கொண்ட பின்னரும் கூட இடைவிடாமல் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.

அந்த வகையில் கடந்த வருடம் பாலிவுட்டில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் என்கிற படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த ஷாருக்கான், நயன்தாரா, அட்லி, அனிருத் ஆகியோருக்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டது. ஒரிஜினல் தாதா சாகிப் பால்கே விருதை பெற்றது போன்று மகிழ்ச்சி அடைந்துள்ளார் நயன்தாரா/

இதற்கு அவர் நன்றி தெரிவித்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் என்னைக்கும் என் கூடவே இருக்கும் உயிர் மற்றும் உலக்கிற்கும் என்னுடைய எல்லாமுமான விக்கிக்கும் ஒரு ஆயிரம் கோடி லவ் யூ. கலைக்கும் காதலுக்கும் நன்றி.. அன்புக்கும் ஆண்டவனுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். ஆனால் மறந்து போய் கூட ரசிகர்களுக்கோ பொது மக்களுக்கோ தனது நன்றியை அவர் சொல்லவே இல்லை/

திரையுலகில் நயன்தாரா இந்த உயரத்தில் இருப்பதற்கு அவர் மேலே குறிப்பிட்ட ஆட்களை விட ரசிகர்களாகிய பொதுமக்கள் தான் காரணம். அவர்களை மறந்து விட்டாரே என ரசிகர்கள் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.

Must Read

spot_img