spot_img
HomeNewsகூவத்தூர் விவகாரத்தில் வைரலாகும் கருணாஸின் வீடியோ

கூவத்தூர் விவகாரத்தில் வைரலாகும் கருணாஸின் வீடியோ

கடந்த சில நாட்களாகவே கூவத்தூர் ரிசார்ட் விவகாரம் தான் மீடியாக்களை பரபரப்பாக ஆக்கிரமித்து வருகிறது. ஜெயலலிதா இறந்த பின்னர் அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பதற்கு முன்பு வரை அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்படி தங்க வைக்கப்பட்ட போது அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுத்து அவர்களை குஷிப்படுத்தியுள்ளனர்.

அந்த வகையில் தான் சமீபத்தில் அதிமுகவில் இருந்து வெளியேறிய ஏவி ராஜு என்பவர் அந்த கூவத்தூர் சமயத்தில் ஒரு எம்எல்ஏ திரிஷா தான் வேண்டும் என்று அடம் பிடித்தார் என்றும் 25 லட்சம் ரூபாய் கொடுத்து அவரை அழைத்து வந்தார்கள் என்றும் ஒரு தகவலை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

அங்கிருந்த அனைவருக்கும் இதுபோன்று நடிகைகள் துணை நடிகைகளை அழைத்து வந்து சப்ளை செய்தது எம்எல்ஏவாக இருந்த நடிகர் கருணாஸ் தான் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் திரிஷா, கருணாஸ் போன்றவர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

அதேசமயம் கருணாஸ் ஒரு நிகழ்வில் பேசும்போது, கூவத்தூரில் அனைத்து எம்எல்ஏக்களையும் தங்க வைக்கலாம் என்கிற ஒரு ஐடியாவை கொடுத்து அந்த இடத்தையும் கண்டு பிடித்துக் கொடுத்தது நான் தான் என்று பேசியுள்ள ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

அதில் அவர் மேலும் பேசும்போது கூவத்தூர் பங்களாவில் தங்க வைத்தால் தான் மூன்று பக்கமும் தண்ணீர் இருப்பதால் வேறு எந்த பக்கமும் யாரும் தப்பித்து போக முடியாது என்கிற ஐடியாவையே நான் தான் கொடுத்தேன் என்று அதில் கூறியுள்ளார். இந்த அளவிற்கு தங்கும் இடத்திற்கு ஏற்பாடு செய்த இவர் ஏன் மற்ற வேலைகளை செய்திருக்கக் கூடாது என்று பலரும் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Must Read

spot_img