spot_img
HomeNewsபிரபல நடிகையை புலி என அழைத்து கிண்டலடித்த அட்லீ

பிரபல நடிகையை புலி என அழைத்து கிண்டலடித்த அட்லீ

தமிழில் பருத்திவீரன் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியாமணி. அந்த படத்தின் மூலம் தேசிய விருதும் பெற்ற அவரை அந்த படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமான முத்தழகு என்றுதான் ரசிகர்கள் பலரும் இப்போதும் அழைத்து வருகிறார்கள்.

அதன் பிறகு நயன்தாரா போல பெரிய அளவில் வருவார் என நினைத்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இப்போது மீண்டும் விட்ட இடத்தை பிடிக்கும் விதமாக படங்களில் நடித்து வருகிறார் பிரியாமணி.

அந்த வகையில் கடந்த வருடம் பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியாமணி. அந்த படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் அட்லீ எப்பொழுதுமே பிரியாமணியை புலி என்றுதான் அழைப்பாராம். சில நேரங்களில் புலி மணி என்று கூட கூப்பிடுவாராம். தனது திறமையையும் துணிச்சலையும் பார்த்து விட்டு தான் இந்த பெயரை வைத்து அட்லீ தன்னை அழைக்க ஆரம்பித்தார் என கூறியுள்ளார் பிரியாமணி.

Must Read

spot_img