spot_img
HomeNewsஷூட்டிங்ஸ்பாட்டில் எந்நேரமும் சந்தேக பிராணியாய் சுற்றிய ஹீரோ ; கே.எஸ் ரவிக்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்

ஷூட்டிங்ஸ்பாட்டில் எந்நேரமும் சந்தேக பிராணியாய் சுற்றிய ஹீரோ ; கே.எஸ் ரவிக்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்

 

தமிழ் சினிமாவில் கமர்சியல் இயக்குனர்களாக வலம் வந்தவர்களை விரல் விட்டு எண்ணினால் அதில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாருக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக ரஜினி, கமல், விஜயகாந்த் அதற்கு அடுத்ததாக விஜய், அஜித், சூர்யா என திரையுலகில் மும்மூர்த்திகளாக ஒவ்வொரு கட்டத்திலும் வலம் வந்த நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.

இதற்காகவே இவரை கன்னடத்திலும் தெலுங்கிலும் படம் இயக்க அழைப்பார்கள். அப்படி அவர் தெலுங்கில் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் பாலகிருஷ்ணாவை வைத்து ஒரு படம் இயக்கினார். பொதுவாகவே பாலகிருஷ்ணா படப்பிடிப்பிற்கு வந்தாலே யாரும் அவரை பார்த்து சிரித்து விடக்கூடாது. காரணம் தன்னைத்தான் ஏதோ சொல்லி நக்கலாக சிரிக்கிறார்கள் என நினைத்து சம்பந்தப்பட்டவர்களிடம் நேரிலேயே சென்று உண்டு இல்லை என ஆகி விடுவார்களாம்.

இதே போல தனது உதவியாளர்கள் வேறு ஏதோ ஒரு விஷயத்திற்காக சிரித்ததை பாலகிருஷ்ணா தவறாக எடுத்துக் கொண்டு அவர்களை அடிக்கும் அளவிற்கு சென்று விட. பாலகிருஷ்ணாவிடம் சமாதானம் கூறி தடுத்தாராம் கே.எஸ் ரவிக்குமார். சமீபத்திய ஒரு விழாவில் கே.எஸ் ரவிக்குமார் இந்த நிகழ்வை சொல்லி சொல்லி சிரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img