spot_img
HomeNewsகடைசி வரைக்கும் விஷயம் என்னன்னு சொல்லாமலேயே ரசிகர் கூட்டத்தை முடித்த சிவகார்த்திகேயன்

கடைசி வரைக்கும் விஷயம் என்னன்னு சொல்லாமலேயே ரசிகர் கூட்டத்தை முடித்த சிவகார்த்திகேயன்

 

முன்னணி நட்சத்திரங்கள் முதற்கொண்டு முதல் படத்தில் அறிமுகமாகும் ஹீரோக்கள் வரை பலரும் தங்களது ரசிகர்கள் மன்றத்தை தான் முதல் நம்பிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் முன்னணி நட்சத்திரமாக மாறியது அந்த ரசிகர்கள் கூட்டத்தால் தான். அதனால் ரசிகர்களுக்கு, அவர்களது வேண்டுகோளுக்கு ஓரளவு செவி சாய்த்து அவ்வப்போது ரசிகர்கள் கூட்டத்தை பிரபல ஹீரோக்கள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் விஜய். அஜித்துக்கு அடுத்ததாக மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தை பெற்று வருகிறார். தற்போது விஜய் சினிமாவை விட்டு ஒதுங்க இருப்பதால் அந்த இடத்தை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக தனது ரசிகர் பலத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.

அதன் விளைவாக சமீபத்தில் தனது ரசிகர் மன்ற கூட்டத்தை கூட்டியுள்ளார் சிவகார்த்திகேயன். அதில் அவர் பேசும்போது சென்டிமென்டாக, “எனக்கு அப்பா இல்லை.. அண்ணன் தம்பிகள் இல்லை.. அதனால் என்னுடைய மனதில் இருக்கும் வலியை நான் வேறு யாரிடம் சென்று பகிர்ந்து கொள்வது.. எனக்கென்று இருப்பவர்கள் நீங்கள் தான். உங்களிடம் தான் நான் மனம் விட்டு பேச முடியும்” என்பது போல பில்டப் பண்ணி பேசி ரசிகர்களை நெகிழ வைத்தாராம்.

ஆனால் தன் மனதில் இருக்கும் வலி என்னவென்று கடைசி வரை அவர் ரசிகர்களிடம் சொல்லவே இல்லையாம். ரசிகர்களை கவர்வதற்காக இப்படி செண்டிமெண்டாக பில்டப் கொடுத்து வளைக்கும் அளவிற்கு சிவகார்த்திகேயன் இறங்கி விட்டாரே என்று சினிமா உலகில் பேசிக்கொள்கிறார்கள் என்று சினிமா உலகில் பேசிக்கொள்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img