spot_img
HomeNewsவிஜய்க்கு என்ன ஆச்சு ? ; கலக்கத்தில் திரை உலகம்

விஜய்க்கு என்ன ஆச்சு ? ; கலக்கத்தில் திரை உலகம்

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் வயது குறைவான இளைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதால் மீசையெல்லாம் எடுத்து பார்ப்பதற்கு ஆளே வித்தியாசமாக இருக்கிறார். தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் இருந்து நேற்று பாராளுமன்ற தேர்தலில் தனது வாக்கை செலுத்துவதற்காக பிளைட் பிடித்து வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார் விஜய்.

இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் விஜய் விதிமீறல் செய்துவிட்டார் என்பது போன்று உப்பு பெறாத விஷயங்களை வைத்து அவர் மீது புகார் அளித்து வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் விட விஜய் இந்த வாக்கு சாவடிக்கு வந்த கோலம் தான் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் அதை பார்த்த பொதுஜனம் பலரிடமும் அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது.

அவர் நடக்கவே முடியாதபடி தள்ளாடியபடி வாக்குச்சாவடிக்கு வந்ததை பார்க்கும்போது விஜய்க்கு என்ன ஆச்சு ? ஒருவேளை படப்பிடிப்பு தளத்தில் ஏதும் விபத்து ஏற்பட்டு விட்டதா ? ஏனென்றால் அவர் கையில் வேறு பேண்டேஜ் ஒட்டி இருந்தார். அப்படி இல்லை என்றால் விமானத்தில் வந்த அதே களைப்பில் வாக்கு செலுத்த வந்து விட்டதால் ஒருவேளை அப்படி இருந்தாரா என்று பல குழப்பமான கேள்விகள் எழுகின்றன.

இன்னும் சிலரோ விஜய் காலையில் வரும்போதே சரக்கு அடித்து விட்டு வந்தார். அதனால் தான் அவரால் சரியாக நடக்க முடியவில்லை என்று தேவையில்லாத விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இது போன்ற பொது இடங்களுக்கு வரும்போது விஜய் இன்னும் கொஞ்சம் விடுக்காக வந்தால் நன்றாக இருக்கும் என்றே ரசிகர்கள் கருதுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img