spot_img
HomeNewsஓட்டு போடாமல் இருப்பது என் தனிப்பட்ட உரிமை ; சொல்கிறார் சமூக ஆர்வலர் ஜோதிகா

ஓட்டு போடாமல் இருப்பது என் தனிப்பட்ட உரிமை ; சொல்கிறார் சமூக ஆர்வலர் ஜோதிகா

நடிகர் சிவகுமார் குடும்பத்தில் அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி மட்டுமல்ல மருமகளும் கூட பெரிய அளவில் சமூக கருத்துக்களை பேசுவார்கள். கோவில்கள் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனை கட்டினால் கல்விக்கூடங்கள் கட்டினால் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுவார்கள்.. ஆனால் கோவில்கள் பற்றி பேசாமல் வெறும் மருத்துவமனை, கல்விக்கூடங்கள் கட்ட வேண்டும் என்கிற வார்த்தைகளை அவர்களால் சொல்ல முடியாது

இந்த வகையில் இவ்வளவு சமூக கருத்துக்களை பேசும் நடிகை ஜோதிகா சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இங்கே வாக்களிக்கவில்லை. அந்த சமயத்தில் அவர் மும்பையில் தற்போது தான் நடித்து வரும் ஸ்ரீகாந்த் என்கிற படத்தில் படப்பிடிப்பில் இருந்துள்ளார்.

இது பற்றி சமீபத்தில் அவரிடம் சமூக கருத்துக்களை பேசும் நீங்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டபோது. “எங்களுக்கும் சில நேரங்களில் தவிர்க்க முடியாத வேலை இருக்கும். ஆதலால் அது எங்களது தனிப்பட்ட உரிமை. அதை கேள்வி கேட்கக் கூடாது” என்று தெனாவட்டாக பதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img