spot_img
HomeNewsநக்மாவுக்காக கதையை மாற்றி எழுதி கடைசியில் அவர் நடிக்காமலேயே வெள்ளி விழா கண்ட படம்

நக்மாவுக்காக கதையை மாற்றி எழுதி கடைசியில் அவர் நடிக்காமலேயே வெள்ளி விழா கண்ட படம்

90களில் துவக்கத்தில் இந்தியிலிருந்து தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை நக்மா. ஷங்கர் தான், தன்னுடைய காதலன் படத்திற்காக இவரை அழைத்து வந்தார். அதன்பிறகு பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்த நக்மா மிகப்பெரிய அளவில் தமிழில் புகழ் பெற்றார். அதன் பிறகு பல ஹீரோக்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.

அந்த சமயத்தில் உள்ளத்தை அள்ளித்தா என்கிற படத்தை இயக்குவதற்காக தயாரானார். இப்போது நீங்கள் பார்க்கும் கதையல்ல அது. அவர் தயாரித்து வைத்திருந்தது வேறு கதை. அதன் பிறகு அந்த படத்தின் தயாரிப்பாளர் எப்படியாவது அந்த படத்தில் நக்மாவை கதாநாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

அதற்காக கொஞ்சம் கொஞ்சமாக கதையை மாற்றி மாற்றி ஏற்கனவே எழுதி வைத்திருந்த கதை சுத்தமாக மாறி போய் உள்ளத்தை அள்ளித்தா என்கிற கதை உருவாகிவிட்டது. ஆனால் நக்மா ரொம்பவே பிஸி ஆகிவிட்டதாலும் அதிகமாக சம்பளம் கேட்டதாலும் வேறு வழி இன்றி அப்போது புதுமுகமாக இருந்த ரம்பாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தி அந்த படத்தை எடுத்தார்கள். அந்த படம் தான் ரம்பாவை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு போய் விட்டது என்பது எல்லாம் நமக்கு தெரிந்த கதைதான்..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img