spot_img
HomeNewsஒரு தடவை யூஸ் பண்ணிட்டா அவ்வளவுதான் ; சினேகா எடுத்த முடிவு

ஒரு தடவை யூஸ் பண்ணிட்டா அவ்வளவுதான் ; சினேகா எடுத்த முடிவு

 

திரையுலக பிரபலங்களை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான பழக்கம் இருக்கும். அதை கடைபிடிப்பதற்கு கூட அவர்களுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். சில விஷயங்கள் ஆரம்பத்திலிருந்து வந்திருக்கலாம். சில விஷயங்கள் போகப்போக உருவாகி இருக்கலாம்.
நடிகை சினேகாவும் அப்படி ஒரு விஷயத்தை தற்போது வரை தொடர்ந்து பின்பற்றி வருகிறார். அது என்னவென்றால் அவர் ஒரு முறை தான் அணியும் உடைகளை மீண்டும் அணிவதே இல்லை. அதை தனது நண்பர்கள் உறவினர்களுக்கு பரிசாக கொடுத்து விடுகிறார்.
எதற்காக இப்படி ? வசதியாக இருக்கிறேன் என்பதற்காக செய்கிறாரா என்றால் காரணம் அது இல்லை.. அதாவது அதற்கு முன்பு அவர் சில நிகழ்ச்சிகளுக்கு தன்னிடம் இருந்த உடைகளை இடைவெளி விட்டு விட்டு மாற்றி அணிந்து சென்ற போதும் கூட ஒரே உடையை தொடர்ந்து அணிந்து வருகிறீர்களே என்று பலரும் கேட்க துவங்கினார்களாம். என்னடா இது வம்பா போச்சு என்றுதான் ஒரு முறை அணிந்த ஆடையை அடுத்து அணிவதில்லை என்கிற முடிவை எடுத்தாராம் சினேகா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img