spot_img
HomeNewsஅல்லு அர்ஜுன் படத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ஜவான் எடிட்டர்

அல்லு அர்ஜுன் படத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ஜவான் எடிட்டர்

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் தான் அப்போது வெளியானது. அதனால் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

அதற்கேற்றபடி படப்பிடிப்பு முடிவடைந்து, வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. படப்பிடிப்பு தாமதமானால் கூட ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று சொல்லலாம். ஆனால் இப்போதே படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் முக்கிய தூணாக இருக்கும் படத்தொகுப்பாளர் ஆண்டனி ரூபன் இந்த படத்தில் இருந்து கடைசி நேரத்தில் திடீரென விலகி பட குழுவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

இவர்தான் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திற்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். இங்கே தமிழில் பிசியாக இருக்கும் இவர் புஷ்பா படத்தின் ஷூட்டிங் சிலமுறை தள்ளி போனதால் இவர் வேறு படத்திற்காக கொடுத்திருந்த தேதிகள் தற்போது அவருக்கு சிக்கலை கொண்டு வந்துள்ளன. அதனால் தயவு செய்து வேறு எடிட்டரை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி படத்தில் இருந்து விலகி விட்டதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img