spot_img
HomeNewsஒருநாள் தாமதமாக அட்வான்ஸ் தரப்பட்டதால் கோபித்த விலகிய பிரபுதேவா ; ஒரு ஹிட் படத்தை கோட்டை...

ஒருநாள் தாமதமாக அட்வான்ஸ் தரப்பட்டதால் கோபித்த விலகிய பிரபுதேவா ; ஒரு ஹிட் படத்தை கோட்டை விட்டார்

நடிகர் பிரபுதேவா ஒரு நடன இயக்குனராக சினிமாவில் நுழைந்து அதன் பிறகு கதாநாயகனாக மாறி மிகப்பெரிய உயரங்களை தொட்டு ஒரு கட்டத்தில் வெற்றிகரமான இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தினார். தற்போதும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பிரபுதேவா.

பொதுவாக சில ஹீரோக்கள் ஏதோ சில காரணங்களால் தங்களை தேடி வந்த படங்களை அவை பின்னாளில் பிளாக்பஸ்டர் படங்களாக மாறப் போகின்றன என்கிற உண்மை அறியாமல் கோட்டை விட்ட சம்பவங்கள் கோலிவுட்டில் நிறைய நடந்திருக்கிறது. அதற்கு பிரபுதேவாவும் விதிவிலக்கு இல்ல.

அப்படித்தான் இயக்குனர் சேரன் தான் உருவாக்கிய ஆட்டோகிராப் படத்தில் நடிப்பதற்காக பல ஹீரோக்களிடம் சென்று கதை சொன்னார். பலரும் மறுத்துவிட்ட நிலையில் கடைசியாக பிரபுதேவாவிடம் சென்று கூறியுள்ளார். பிரபுதேவாவும் கதை பிடித்து போய் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் அவருக்கு சொன்ன தேதியில் அட்வான்ஸ் பணம் கொடுக்கப்படாமல் ஒருநாள் தாமதமாக மறுநாள் கொண்டு போய் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த தாமதத்திற்காக கோபித்துக் கொண்ட பிரபுதேவா அந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று கூறி ஒதுங்கி விட்டார்.

அதன் பிறகு தான் இனியும் வேறு ஹீரோக்களை தேட வேண்டாம் என்று தானே அந்த படத்தில் கதாநாயகனாக நடித்தார் சேரன். அந்த படம் எவ்வளவு சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது என்பது நாம் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img