spot_img
HomeNewsரஜினிக்கு ஒரு தேவா..! பிரபாஸுக்கு ஒரு சந்தோஷ் நாராயணன்..!!

ரஜினிக்கு ஒரு தேவா..! பிரபாஸுக்கு ஒரு சந்தோஷ் நாராயணன்..!!

என்னடா இது, மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல டைட்டிலேயே இப்படி ஒரு குழப்பத்தை சொல்லி இருக்கிறார்களே என குழம்ப வேண்டாம். விஷயம் இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்கு இதுவரை இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் மற்றும் தேனிசைத் தென்றல் தேவா என மூன்று ஜாம்பவான்கள் பல சூப்பர் ஹிட் பாடல்களை தொடர்ந்து கொடுத்துள்ளனர்.

ஆனால் இந்த மூன்று பேரிலும் காலம் கடந்து ரஜினி ரசிகர்களின் மனதில் நிற்பது யார் என்றால் அது தேனிசைத் தென்றல் தேவா தான். காரணம் கடந்த 30 வருடங்களாக அதாவது அண்ணாமலை படம் தொடங்கி இப்போது வரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் அவரது பெயரை டைட்டில் கார்டில் போடும்போது ஒலிக்கும் பின்னணி இசை தேவா இசை அமைத்தது தான்.

அதன் பிறகு எத்தனை இசையமைப்பாளர்கள் ரஜினியின் படங்களுக்கு இசையமைத்தாலும் தேவா இசை அமைத்த டைட்டில் இசையுடன் தான் படமே துவங்கும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.. என்றாலும் பிரபாஸ் விஷயத்தில் இப்போது இதை சொல்வதற்கு காரணம் என்னவென்றால் பிரபாஸ் நடிக்க உள்ள கமலும் இணைந்து நடிக்கின்ற கல்கி என்கிற படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

பிரபாஸ் தென்னிந்தியா மட்டும் அல்லாது இந்திய அளவில் மிகப்பெரிய ஹீரோவாகிவிட்டார். உலகம் முழுவதும் அவரை பலருக்கு தெரியும். அதனால் இந்த கல்கி படத்தில் அவருடைய அறிமுக காட்சிக்கு ரசிகர்கள் மறக்கவே முடியாதபடி ஒரு நினைவு பரிசாக இசையமைத்து அவருக்கு வழங்க இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

ஒருவேளை ரஜினிக்கு தேவா இசையமைத்தது போல இவரது இசையும் பிரபாஸுக்கு காலம் காலமாக பெயர் சொல்லும் விதமாக நிலைத்து நின்றாலும் இருக்கலாம்.. யார் கண்டது ?

Must Read

spot_img