spot_img
HomeNews”அவரை கருப்பு என்று நான் கூறவில்லை” ; மறைந்த ஹீரோ பற்றி கண்ணீர் விட்ட முன்னாள்...

”அவரை கருப்பு என்று நான் கூறவில்லை” ; மறைந்த ஹீரோ பற்றி கண்ணீர் விட்ட முன்னாள் நடிகை

மலையாளத்தில் நகைச்சுவை கலந்த நடிகராக கதாநாயகராக பல வருடங்கள் ரசிகர்களை மகிழ்வித்தவர் நடிகர் கலாபவன் மணி. தமிழில் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பு பெற்றார். இதைத் தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வந்த அவர் சில வருடங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

அவருடன் நடித்த நடிகை திவ்யா உன்னி என்பவர் (தமிழில் வேதம், kanna வருவான், சபாஷ், பாளையத்தம்மன் போன்ற படங்களில் நடித்தவர்) கலாபவன் மணியின் கருப்பு நிறத்தை பற்றி குறை கூறி அவருடன் நடிக்க மறுத்தார் என ஒரு சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. பல ரசிகர்களும் சம்பந்தப்பட்ட நடிகைக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் திவ்யா உன்னி. அவரிடம் கலாபவன் மணி சர்ச்சை குறித்து கேட்டபோது, நானும் அவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளோம். இருவரும் நெருக்கமான பிணைப்பு கொண்டிருந்தோம். அவரை அப்படி நான் அவமதித்ததே இல்லை. யாரோ என்னை பிடிக்காதவர்கள் வேண்டுமென்று கட்டிவிட்ட கதை தான் இது என்று கண்கலங்கியபடி கூறியுள்ளார்.

Must Read

spot_img