spot_img
HomeNewsகஞ்சா கருப்பு நடிக்க மறுத்ததால் ஜெயிலர் வில்லனுக்கு அடித்த ஜாக்பாட்

கஞ்சா கருப்பு நடிக்க மறுத்ததால் ஜெயிலர் வில்லனுக்கு அடித்த ஜாக்பாட்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஜெயிலர். இந்த படத்தில் வில்லனாக நடித்து தமிழகத்தில் மட்டுமல்ல, தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டிலும் யாருடா இவர் என்று திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தனது நடிப்பால் மிரட்டியவர் மலையாள நடிகர் விநாயகன்.

தமிழுக்கு இவர் ஒன்றும் புதியவர் அல்ல. ஏற்கனவே விஷால் நடித்த படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டிக்கு அடியாளாக ஒரு மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் காமெடி கலந்து நடித்து அப்போதே ரசிகர்களை கவர்ந்தவர் தான். இத்தனை வருடம் கழித்து அசுர வளர்ச்சி அடைந்து ரஜினிக்கே வில்லனாக நடித்து அதன் மூலம் பாராட்டுக்களையும் பெற்று மிகப் பெரிய உயரத்தை தொட்டுள்ளார்.

ஆனால் இந்த ஜெயிலர் வாய்ப்பு இவருக்கு கிடைப்பதற்கு ஒரு மறைமுக காரணம் நடிகர் கஞ்சா கருப்பு என்றால் உங்களால் நம்ப முடியுமா ? திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் அடியாளாக நடிப்பதற்கு முதலில் பேசப்பட்டவர் நடிகர் கஞ்சா கருப்புதான். அப்போது அவர் பிஸியாக நடித்து வந்ததாலோ அல்லது அதிக சம்பளம் கேட்டதாலோ அவருக்கு பதிலாக அந்த சமயத்தில் ஏதேச்சையாக ஒரு இடத்தில் சந்திக்க விநாயகனை பார்த்து நீ தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என ஒப்பந்தம் செய்தார் இயக்குனர் தருண் கோபி.

அப்போது விநாயகன் ஒன்றும் பெரிய பிரபலம் அல்ல.. ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து தனக்கான பாதையை உருவாக்கிக் கொண்டார். அன்று அவருக்கு அந்த கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்றால் அவரது சினிமா பாதை வேறு விதமாக சென்று இருக்கலாம்.. இந்த ஜெயிலர் பட வாய்ப்பு கூட கிடைக்காமல் போய் இருக்கலாம் என்பதுதான் உண்மை.

Must Read

spot_img