spot_img
HomeNewsராஷ்மிகா-சமந்தா செய்த திரை மறைவு வேலைகளை போட்டு உடைத்த பிரியாமணி

ராஷ்மிகா-சமந்தா செய்த திரை மறைவு வேலைகளை போட்டு உடைத்த பிரியாமணி

தென்னிந்திய அளவில் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தும் நடிகைகள் என்றால் ராஷ்மிகா மந்தனா மற்றும் சமந்தா இருவரும் தான். இவர்கள் எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் அது மீடியாக்களில் செய்தியாக மாறுகிறது. குறிப்பாக இவர்கள் விமான நிலையத்திற்கு வந்து செல்வது, ஜிம்மிற்கு போய் வருவது என எல்லாமே புகைப்படங்களாக சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகின்றன.

இங்கே எல்லாம் இவர்கள் எப்போது போகிறார்கள், வருகிறார்கள் என்பதே எப்படி மீடியாக்களுக்கு தெரிகிறது, சரியாக இதே நேரத்தில் எப்படி சென்று அவர்கள் போட்டோ எடுக்கிறார்கள், சம்பந்தப்பட்ட நடிகைகளும் மீடியாவை அங்கே எதிர்பார்க்காதது போல போஸ் கொடுப்பதும் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு போவதும் பெரும்பாலான ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவதும் உண்டு. இதன் பின்னணியில் உள்ள ரகசியத்தை தான் நடிகை பிரியாமணி சமீபத்தில் போட்டு உடைத்துள்ளார்.

அதாவது இதுபோன்று நடிகைகள் பலரும் தாங்கள் ஏர்போர்ட், ஜிம் ஆகிய இடங்களுக்கு செல்லும் தகவலை பிரபல ஏஜென்சிகளுக்கு தெரிவித்து விடுவார்களாம். அந்த ஏஜென்சிகள் தங்களது மீடியா ரிப்போர்ட்டர்களை உடனடியாக இவர்கள் செல்லும் இடங்களுக்கு அனுப்பி ஏதேச்சையாக அங்கே அவர்களை புகைப்படம் எடுப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி அதை சோசியல் மீடியாக்கள் பரப்பி பணம் பார்க்கிறார்களாம்.

இதற்கு சம்பந்தப்பட்ட நடிகைகளும் ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த ஏஜென்சிகளுக்கு தருகிறார்களாம். எனக்கும் அப்படி சில ஏஜென்சிகளிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் நான் அதை விரும்பவில்லை என்று கூறியுள்ளார் பிரியாமணி.

Must Read

spot_img