spot_img
HomeNewsஒரு பய வரக்கூடாது ; திருமணத்திற்காக பலே திட்டம் போட்ட சசிகுமார் நாயகியின் கணவர்

ஒரு பய வரக்கூடாது ; திருமணத்திற்காக பலே திட்டம் போட்ட சசிகுமார் நாயகியின் கணவர்

சசிகுமார் நடித்து பல வருடங்களுக்கு முன்பு வெளியான பிரம்மன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. பின்னர் மாயவன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதே சமயம் தெலுங்கு திரையுலகில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.

அப்படி தெலுங்கில் நடித்தபோது அங்கு சிரஞ்சீவி குடும்பத்தை சேர்ந்த வாரிசு நடிகரான வருண் தேஜ் என்பவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கடந்த மாதம் இத்தாலி நாட்டில் நடைபெற்றது.

இதில் திரையுலகை சேர்ந்த யாரும் கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் சிரஞ்சீவி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் இதில் பங்கு கொண்டனர். பின்னர் ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திரையுலகினருக்காக நடத்தப்பட்டது.

எதற்காக இத்தாலியில் திருமணத்தை வைத்தேன் என்பது குறித்து மாப்பிள்ளை வருண் தேஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “எனது திருமணத்தின் போது எங்கள் உறவினர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து அவர்களுடன் கேலி கிண்டல் கலாட்டா என சந்தோஷத்தை முழுதாக அனுபவிக்க வேண்டும் என நினைத்தேன். இதில் வெளியில் இருந்து ஆட்கள் வந்தால் இந்த சந்தோசம் முழுதாக கிடைக்காது என்பதால் தான் இத்தாலி நாட்டில் எனது திருமணத்தை வைத்தோம்.

இதுவே ஹைதராபாத்தில் வைத்திருந்தால் ஒரு லட்சம் பேர் எங்களது குடும்பத் திருமணத்திற்கு தவறாமல் வருவார்கள். ஆனால் இத்தாலியில் வைத்து வெறும் 100 பேர்கள் மட்டுமே கலந்து கொள்ள எங்களது திருமணத்தை நடத்தினோம்” என்று ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.

Must Read

spot_img