spot_img
HomeNewsமுதல் கணவருடன் இனிமையாக பிரிந்த நடிகை ; பத்து வருடம் கழித்து மறுமணம்

முதல் கணவருடன் இனிமையாக பிரிந்த நடிகை ; பத்து வருடம் கழித்து மறுமணம்

சினிமா நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்வதும் பின்னர் சில வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதும் அதைத்தொடர்ந்து மறுமணம் செய்வதும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் மலையாள திரையுலகை சேர்ந்த நடிகையின் லேனா என்பவரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். தமிழில் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் வில்லி டாக்டராக நடித்திருப்பார். திரௌபதி படத்தில் கூட இவர் டாக்டராக தான் நடித்திருந்தார்.

மலையாளத்தில் பிஸியாக நடித்து வரும் இவர் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டார். அவரை காதல் திருமணம் செய்து இருந்தாலும் கூட கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தார். இவருக்கு விவாகரத்து தீர்ப்பு வரும் போது கூட தான் விவாகரத்து செய்த கணவருடன் நீதிமன்றத்தில் உள்ள கேண்டீனில் அமர்ந்து குலோப் ஜாமுன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அளவிற்கு டீசன்டாக முதல் கணவருடன் இருந்து விவாகரத்து பெற்றார்.

இந்த நிலையில் தற்போது பிரசாந்த் பிள்ளை நாயர் என்கிற இந்திய விமானப்படை வீரரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் லேனா. இவர் ககன்யான் என்கிற இந்திய விண்வெளி விமான பயணத்தில் வீரராக செயல்பட்டவர். இதற்காக சமீபத்தில் கேரளா வந்த பாரத பிரதமரின் கையால் விருதும் பெற்றார். இந்த விருது பெற்றதைத் தொடர்ந்து தான் இவரை கடந்த மாதமே திருமணம் செய்து கொண்ட விஷயத்தை நடிகை லேனா வெளியிட்டுள்ளார்.

Must Read

spot_img