spot_img
HomeNewsபாண்டிச்சேரி சிறுமி விவகாரம் ; விஜய்யின் கண்டன குரல் ஒலித்ததற்கு இதுதான் காரணமா ?

பாண்டிச்சேரி சிறுமி விவகாரம் ; விஜய்யின் கண்டன குரல் ஒலித்ததற்கு இதுதான் காரணமா ?

 

சமீபத்தில் பாண்டிச்சேரியில் 9 வயது சிறுமி ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்திய ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பாண்டிச்சேரி மட்டுமல்லாமல் தமிழகமெங்கும் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன.

பொதுவாக இது போன்ற விஷயங்களில் விஜய், அஜித் போன்றவர்கள் கண்டும் காணாதது போல இருந்து விடுவார்கள். ஏதோ ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் விஜய் குரல் கொடுப்பார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஜய். அதை தொடர்ந்து இதுபோன்று நடக்கும் பிரச்சனையான நிகழ்வுகளுக்கு விஜய் குரல் கொடுப்பாரா என எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் பல விஷயங்களில் விஜய் குரல் கொடுக்கவே இல்லாமல் அமைதியாக இருந்தார். இந்த நிலையில் பாண்டிச்சேரியில் நடைபெற்ற இந்த கொடுமையான நிகழ்வுக்கு தனது கண்டனங்களை அறிக்கை மூலமாக தெரிவித்துள்ள விஜய் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு மிக உயர்ந்த தண்டனை தர வேண்டும் எனவும் கொந்தளித்துள்ளார்.

பலரும் விஜயின் இந்த ரியாக்சனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதற்கு முன்பு நடந்த விஷயங்களில் எல்லாம் அமைதியாக இருந்த விஜய் திடீரென இந்த குழந்தை விஷயத்தில் தனது கருத்தை வெளியிட்டதற்கு இது குழந்தை விஷயம் என்பது மட்டும் காரணம் அல்ல.. இது பாண்டிச்சேரியில் நடைபெற்ற நிகழ்வு..

விஜய்யின் மக்கள் இயக்க பொதுச்செயலாளராக இருப்பது பாண்டிச்சேரியை சேர்ந்த புஸசி ஆனந்த் தான். அதனால் பாண்டிச்சேரியில் மிகுந்த செல்வாக்குடன் விஜய் மக்கள் இயக்கத்தை கட்டி காத்து வளர்த்து வருகிறார் இப்படி தனது சொந்த மாநிலமான பாண்டிச்சேரியில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்று அதை விஜய் கண்டுகொள்ளாமல் சென்றால் நாளை கட்சியாக மக்களிடம் ஓட்டு கேட்க சென்று நிற்கும்போது மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் என்பதை விஜய்யிடம் எடுத்துக்கூறி இது போன்ற ஒரு அறிக்கை வெளியிட வைத்ததாக சில கூறி வருகின்றனர். எது உண்மை என்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே வெளிச்சம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img