spot_img
HomeNewsகையகல பொருளை தொலைத்ததால் பல கோடி வீண் ; ரஜினியின் மகள் இவ்வளவு கேர்லஸ் ஆகவா...

கையகல பொருளை தொலைத்ததால் பல கோடி வீண் ; ரஜினியின் மகள் இவ்வளவு கேர்லஸ் ஆகவா இருப்பார் ?

 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தின் தோல்வி அந்த படம் வெளியான பிறகு அதுபற்றி பல விஷயங்களை வெளிக் கொண்டு வந்திருக்கிறது. ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நல்ல கதையை தயார் செய்திருந்தாலும் தனது தந்தை நடித்த மொய்தீன் பாய் கதாபாத்திரத்திற்காக 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கி இருந்தாலும் போகப் போக மொய்தீன் பாயை மையப்படுத்தி கதை நகரும் விதமாக மாற்றிவிட்டார் என குற்றம் சாட்டப்பட்டது. அதையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் ஒப்புக்கொண்டார்.

அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அடங்கிய ஒரு ஹார்ட் டிஸ்க் படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டது என்றும் ஒரு தகவல் வெளியானது. அந்த சமயத்தில் அது பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. தற்போது அது குறித்து பேசி உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனது உண்மைதான் என கூறியுள்ளார்.

மேலும், “அதை மீண்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.. அதனால் நாங்கள் எடுத்த பல காட்சிகளை திரும்ப எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மீண்டும் படப்பிடிப்பிற்காக ஏற்கனவே நடித்த நடிகர்களை ஒன்று திரட்டுவதும் சிரமமாக இருந்ததால் எடுத்த காட்சிகளை மட்டும் வைத்து ஒரு புதிய திரைக்கதையை உருவாக்கி படத்தை முடித்தோம் என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் போன்ற ஒரு ஜாம்பவானின் மகள், மிகப்பெரிய லைக்கா நிறுவனத்திடம் படம் தயாரிக்கும் போது இப்படி ஹார்ட் டிஸ்க் காணாமல் போனது என்று சொல்வதும் எடுத்த காட்சிகளை வைத்து ஒப்பேற்றியது என்று சொல்வதும் பொறுப்பான பேச்சு அல்ல என்று ரஜினி ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img