spot_img
HomeNewsநான் எப்படி சாப்பிட்டால் உனக்கு என்ன ? சீறிய விஷால்

நான் எப்படி சாப்பிட்டால் உனக்கு என்ன ? சீறிய விஷால்

நடிகர் விஷால் பெரும்பாலும் ஏதோ ஒரு வகையில் மீடியாவில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத செய்திகளை அவ்வப்போது கொடுத்து வருகிறார். அவர் பேசும் கருத்துக்கள் கூட சில நேரம் சலசலப்பை ஏற்படுத்தி விடும். அந்த விதமாக சமீப காலமாக விஷால் பொது நிகழ்ச்சிகளில், குறிப்பாக தனது படம் சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொள்ளும்போது கூட நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருடனும் அமர்ந்து பந்தியில் சாப்பிடும் போது இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து என மூன்று மத கடவுள்களையும் முறைப்படி வணங்கிவிட்டு தான் சாப்பிட ஆரம்பிக்கிறார்.

இதை அருகில் இருந்து பார்க்கும் பலரும் அவருக்கு தெரியாமல் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொள்கிறார்கள். அப்படி சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பந்தியில் சாப்பிடும்போது அருகில் இருந்த யோகி பாபு அவரை குறுகுறு என்று பார்ப்பது போன்று ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானது. பலரும் இதற்கு கிண்டலாக கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் விஷாலிடம் இந்த சாப்பிடும் முறை குறித்து பத்திரிக்கையாலர்கள் கேட்டபோது நான் எப்போதுமே சாப்பிடுவதற்கு முன் இது போன்று மூன்று மத கடவுள்களையும் வணங்கி விட்டு தான் சாப்பிடுவேன்.. இதில் யாருக்கு என்ன பிரச்சனை வந்தது? நான் அப்படித்தான் சாப்பிடுவேன்.. யார் என்ன சொன்னாலும் அது பற்றி எனக்கு கவலை இல்லை என்று காட்டமாக பதில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img