spot_img
HomeNewsபையா-2வை ஒதுக்கிய கார்த்தி ; காரணம் இதுதான்

பையா-2வை ஒதுக்கிய கார்த்தி ; காரணம் இதுதான்

 

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2010 இல் வெளியான பையா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சொல்லப்போனால் பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் என முரட்டு தோற்றத்தில் கிராமத்துக்காரனாக நடித்த கார்த்தியை, ஸ்டைலான சாக்லேட் பாயாக இந்த படத்தில் மாற்றினார் எங்குசாமி. படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த படம் விரைவில் பல திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகப்போகிறது. அதே சமயம் பையா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இருக்கிறதா என லிங்குசாமியிடம் கேட்டபோது அதற்கான கதையை தயார் செய்து வைத்து விட்டேன். கார்த்தியிடமும் கூறினேன்.

ஆனால் இந்த படமும் ஒரு சாக்லேட் பாய் கதை தான். ஏற்கனவே கார்த்தி பல படங்களில் மெச்சூரிட்டியான கதாபாத்திரங்ககளில் நடித்து ஒரு குழந்தைக்கு அப்பாவாக கூட நடித்து விட்டதால் இனி இதுபோன்று சாக்லேட் பாயாக நடித்தால் நன்றாக இருக்காது என்பதால் பையா 2 வை பண்ண வேண்டாம் வேறு ஏதாவது கதை தயார் செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம்.

ஆனாலும் பையா-2வை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்கும் எண்ணமும் இருக்கிறது என்றும் லிங்குசாமி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img