spot_img
HomeNewsநவீன ஜெய்சங்கர் ஆக மாறும் ஜி.வி பிரகாஷ்

நவீன ஜெய்சங்கர் ஆக மாறும் ஜி.வி பிரகாஷ்

ஏ.ஆர் ரகுமானின் சகோதரி மகன் என்கிற அடையாளத்துடன் திரையுலகில் வசந்தபாலனின் இயக்கத்தில் வெளியான ‘வெயில்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ் குமார். ஆனால் இசைக்கு, வாரிசு என்கிற தகுதி தேவையில்லை. திறமை மட்டுமே வேண்டும் என்பதை முதல் படத்திலேயே நிருபித்த அவர் கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துள்ளார்.

இன்னொரு பக்கம் நடிப்பின் மீதான ஆர்வத்தில் ஒரு நடிகராகவும் மாறி கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி பிரகாஷ். இந்தநிலையில் அவர் நடித்துள்ள படங்கள் வாரம் ஒன்று என்கிற விதமாக வெளியாகி வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ‘ரெபெல்’, கடந்த வாரம் ‘கள்வன்’ என ஜி.வி.பிரகாஷ் படங்கள் வெளியாகின.

இதையடுத்து வரும் ஏப்-11ஆம் தேதி அவர் நடித்துள்ள டியர் என்கிற படம் வெளியாகிறது. இதற்குமுன் இப்படி நடிகர் ஜெய்சங்கரின் படங்கள் தான் அடிக்கடி வெளியாகி வந்தன. அதனாலேயே அவரை வெள்ளிக்கிழமை நாயகன் என்று கோருவார்கள். அந்தவகையில் தற்போது நவீன ஜெய்சங்கராக மாறிவிட்டார் என்றே சொல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img