spot_img
HomeNewsஇங்க வச்சாத்தானே இடைஞ்சல் பண்ணுவீங்க.. விஜய் அடுத்த அதிரடி முடிவு

இங்க வச்சாத்தானே இடைஞ்சல் பண்ணுவீங்க.. விஜய் அடுத்த அதிரடி முடிவு

 

நடிகர் விஜய் கடந்த 15 வருடங்களுக்கு மேலாகவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளால் பல்வேறு விதமான இடைஞ்சலுக்கு ஆளாகி வருகிறார். குறிப்பாக அவரது படங்களின் இசை வெளியீட்டு விழாக்களை நடத்துவதற்கு மற்ற நடிகர்களுக்கு கிடைப்பது போன்று எளிதாக குறிப்பிட்ட சில இடங்கள் கிடைப்பதில்லை.
அதற்கு அரசாங்க அதிகாரிகள் பல்வேறு காரணங்களை சொல்லி இடைஞ்சல்களை கொடுத்து வருகின்றனர். ஒரு சில படங்களுக்கு அவர் இசை வெளியீட்டு விழா நடத்துவதற்கே யோசித்தார். அப்படித்தான் லியோ படத்திற்கு வெற்றி விழா நடத்துவதற்கு அவருக்கு விரும்பிய அரங்கம் கிடைக்க தடை ஏற்படுத்தப்பட்டது. ஒரு வழியாக பல நிபந்தனைகளுடன் அந்த விழாவை நடத்தி முடித்தார்.
இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை இந்த முறை சென்னையில் நடத்த வேண்டாம் என்றும் துபாய் போன்ற வெளிநாடுகளில் நடத்திக் கொள்ளலாம் என்றும் விஜய் முடிவு செய்துள்ளாராம்.
இப்போது தனியாக அரசியல் கட்சி வேறு துவங்கியுள்ளதால் இந்த சமயத்தில் தேவை இல்லாமல் சென்னையில் நடத்தி அதன் மூலம் மேலும் சிக்கலை இழுத்துக் கொள்ள வேண்டாம் என்று தான் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img