spot_img
HomeNewsவளர்த்து விட்டவர்கள் உதறித்தள்ளிய நிலையில் பாண்டிராஜுக்கு கை கொடுக்கும் உயர்ந்த நடிகர்

வளர்த்து விட்டவர்கள் உதறித்தள்ளிய நிலையில் பாண்டிராஜுக்கு கை கொடுக்கும் உயர்ந்த நடிகர்

 

பசங்க மெரினா என்கிற தொடர் ஹிட் படங்களை கொடுத்து இயக்குனராக மாறியவர் பாண்டிராஜ் அதன் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தார் கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இவர் கொடுத்ததும் இவரது ரேஞ்சே மாறியது அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து நம்ம வீட்டு பிள்ளை சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் என பெரிய ஹீரோக்களின் படங்களாக இயக்கினார் ஆனால் இரண்டு படங்களுமே இவருக்கு கை கொடுக்கவில்லை இயக்குனர்களை பொறுத்தவரை இப்படி அடுத்தடுத்து இரண்டு படங்கள் கைவிட்டாலே மேலே எழுந்து வருவது சிரமம் தற்போது அப்படி ஒரு நிலையில் தான் இருக்கிறார் இயக்குனர் பாண்டியராஜ் இவர் அறிமுகப்படுத்திய நடிகர்களான விமல் சிவகார்த்திகேயன் எல்லோரும் இவர் வந்தாலே ஆள் இல்லை என்கிற ரேஞ்சில் கதவை சாத்திக் கொள்கிறார்களா இந்த நிலையில் தான் இவரது படத்தில் நடிப்பதற்கு தானாகவே முன்வந்து ஒப்புக் கொண்டுள்ளாராம் நடிகர் ஜெயம் ரவி அவர் தனது அண்ணனின் தனி ஒருவன் 2 படத்தில் நடிப்பதாக இருந்தது அந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளி போக அந்த தேதிகளை இயக்குனர் பாண்டியராஜுக்கு கொடுத்து விட்டார் என்று சொல்கிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img