spot_img
HomeNewsபடம் முக்கியமா ? அழகு சாதன பொருட்கள் முக்கியமா ? விமர்சனத்திற்கு ஆளான நடிகை

படம் முக்கியமா ? அழகு சாதன பொருட்கள் முக்கியமா ? விமர்சனத்திற்கு ஆளான நடிகை

பெரும்பாலும் ஒவ்வொரு படமும் வெளியாகும் போது அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுவது வாடிக்கை. ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஒரு சில நடிகைகள் தாங்கள் கலந்து கொள்வதே இல்லை. படத்தை பற்றி பொதுவெளியிலும் பேசுவது இல்லை. சம்பளம் வாங்கினோமா, படத்தில் நடித்தோமா, அதோடு எங்கள் வேலை முடிந்து விட்டது என்பது போல ஒதுங்கி கொள்கிறார்கள்.

தமிழில் திரிஷா, நயன்தாரா போன்றவர்கள் அந்த வேலையை செய்து கொண்டிருந்தார்கள். தற்போது அவர்கள் கூட படங்கள் குறித்து பேச ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையில் பிரபாஸ் நடிப்பில் கமல், அமிதாப் ஆகியோர் இணைந்து நடித்துள்ள கல்கி திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஆனால் சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இவர் கல்கி படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மறுத்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

அதே சமயம் தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் கூட இந்த படம் பற்றி புரமோஷன் செய்யாமல் தான் சொந்தமாக பிசினஸ் செய்யும் அழகு சாதன பொருட்கள் பற்றி தொடர்ந்து விளம்பரம் செய்து வருகிறார் தீபிகா படுகோன்.

அதேசமயம் இதேபோன்று கர்ப்பமாக இருந்த நடிகை அமலாபால் தான் நடித்திருந்த ஆடு ஜீவிதம் திரைப்படத்திற்காக புரமோஷன் நிகழ்ச்சிகளில் நேரிலேயே கலந்துகொண்டு அந்த படத்திற்கு உறுதுணையாக நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் இந்த இரண்டு பேரின் செயலையும் ஒப்பிட்டு தீபிகா படுகோனை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img