spot_img
HomeCinema Reviewமிஸஸ் அண்ட் மிஸ்டர் – விமர்சனம்

மிஸஸ் அண்ட் மிஸ்டர் – விமர்சனம்

காதல் திருமணம் செய்து கொள்ளும் வனிதா விஜயகுமாரும், ராபர்ட்டும் பாங்காக்கில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். 40 வயதை எட்டும் வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால், ராபர்ட் குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும், கர்ப்பமாவதற்கான அனைத்து முயற்சிகளிலும் வனிதா ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி வனிதா கர்ப்பமாகி விட, ராபர்ட்டுகு தெரிந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள தடையாக இருப்பார், என்று நினைத்து அவருக்கு தெரியாமல் பாங்காக்கில் இருந்து இந்தியா வந்துவிடுகிறார். வனிதாவின் பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் ராபர்ட், வனிதாவை தேடி இந்தியா வருகிறார்.

வனிதா ஆசைப்பட்டது போல் குழந்தை பெற்றுக் கொண்டாரா?, அவரது கணவர் ராபர்ட் குழந்தை வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம் என்ன ? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாற்பது வயதை எட்டும் பெண்மணி வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வனிதா விஜயகுமார் தன்னுடைய உடல் மொழிக்கும், தோற்றத்திற்கும் பொருத்தமான கதாபாத்திரத்தை தெரிவு செய்து நடித்திருக்கிறார். ஆனால் இயக்கத்தில் கோட்டை விட்டிருக்கிறார்.

அருண் என்ற கதாபாத்திரத்தில் வித்யாவின் கணவராக – 45 வயது உள்ள கம்பீரமான ஆண்மகனாக றொபட் மாஸ்ரர் நடித்திருக்கிறார். நடனத்தில் வழக்கம் போல் முத்திரையை பதித்திருக்கிறார்.

நாற்பது வயதை கடந்து விட்ட பெண்மணிகளுக்கு பிரசவம் என்பது எளிமையானது இல்லை என்பதை நேரடியாகவும், திருமணமான தம்பதிகள் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை மறைமுகமாகவும் வலியுறுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒரு பிரிவினர் பாராட்டத்தான் செய்கிறார்கள். ஏனெனில் இந்த திரைப்படம் அடல்ட் கொமடி ஜேனரில்  சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் கடந்த தசாப்தங்களில் கவர்ச்சி நடிகைகளாக நடித்த நடிகைகள் ( ஷகீலா – கும்தாஜ் – கிரண்…)  நடித்திருக்கிறார்கள். ஆனால் ரசிக்க முடியவில்லை.

ஸ்ரீமன், கணேஷ், அனு மோகன், செஃப் தாமு ஆகியோரும் திரையில் தோன்றி உள்ளனர். அவ்வளவுதான்.
ஒளிப்பதிவு – பாடல்கள் – பின்னணி இசை – படத் தொகுப்பு – கலை இயக்கம் – என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் குறைந்த பட்ச அளவிலேயே இருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் வனிதா விஜயகுமார். நாற்பது வயதில் குழந்தை பெற்றுக் கொள்வது சிரமம் பல சிக்கல்களை உண்டாக்கும் என்பதை பெண்களுக்கு உணர்த்த நினைத்து திரைக்கதை எழுதினாலும், அதை சரியாக கையாளாமல் தேவையில்லாத காட்சிகள், சம்பந்தமே இல்லாமல் வரும் ஷகிலா ரசிகர்கள்,பாங்காக்கில் நடக்கும் அடல்ட் கலந்த சம்பவங்கள்,  சொந்த ஊரில் நடக்கும் கேலிகள் நிறைந்த கும்மாளங்கள் என்று கதையை சிதறவிட்டு உண்மையான கருத்து எடுபடாமல் போக வைத்து விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img