spot_img
HomeNewsஅண்ணனை டீலில் விட்ட தம்பி ஜெயம் ரவி ; இதுதான் காரணமா ?

அண்ணனை டீலில் விட்ட தம்பி ஜெயம் ரவி ; இதுதான் காரணமா ?

நடிகர் ஜெயம் ரவியின் திரையுலக பயணத்தில் அவரை அறிமுகப்படுத்திய ஒரு இயக்குனராக அவரது அண்ணன் மோகன் ராஜாவின் பங்கு மிகப் பெரியது. ஒரு படத்தில் அறிமுகப்படுத்தி வெற்றி கொடுத்ததோடு நிற்காமல் தொடர்ந்து அவரை வைத்து வரிசையாக நான்கைந்து படங்களை இயக்கி ஜெயம் ரவிக்கு ஒரு நிலையான இடத்தை பெற்றுக் கொடுத்தார். தமிழ் சினிமாவில் தானும் ஒரே நிலையான இடத்தை பிடித்தார்.

இடையில் தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து மீண்டும் தனி ஒருவன் என்கிற படத்தை இயக்கினார் மோகன் ராஜா அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதன் பிறகு அவர் இயக்கிய வேலைக்காரன் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகிறார் மோகன் ராஜா.

இந்த நிலையில் மீண்டும் தனி ஒருவன் 2 படத்தை எடுப்பதாக அறிவித்தார் மோகன் ராஜா. ஜெயம் ரவியும் அவருக்கு வேண்டிய தேதிகளை ஒதுக்கி கொடுத்தார். இந்த சமயத்தில் தான் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் சூட்டிங் மே மாதம் முடிந்து விடும் என்று நம்பி இருந்த ஜெயம் ரவிக்கு இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் வரை நீண்டு கொண்டே செல்லும் என்று தெரிய வந்ததும் அதிர்ச்சி ஆகிவிட்டாராம். அதனால் தற்போது தனி ஒருவன் 2 படத்திற்காக கொடுத்திருந்த தேதிகளை வேறு வழியின்றி மணிரத்னம் படத்திற்காக கொடுத்துள்ளாராம் ஜெயம் ரவி.

தன்னை நம்பி கதையின் நாயகனாக வைத்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்கிய மணிரத்னத்திற்கு நன்றிக்கடனாக இதை ஜெயம் ரவி செய்தாலும் தன்னை வளர்த்து விட்ட அண்ணனின் படத்தை அம்போ என விட்டு விட்டதை எந்த நன்றிக்கடனில் சேர்ப்பது ?

Must Read

spot_img