spot_img
HomeNewsநடிகர் செந்தில் செய்த காரியத்தால் ரூமை விட்டு காலி செய்த ரஜினி

நடிகர் செந்தில் செய்த காரியத்தால் ரூமை விட்டு காலி செய்த ரஜினி

தமிழ் சினிமாவின் எண்பது 90களில் முன்னணி காமெடி நடிகர்களாக வலம் வந்தவர்கள் கவுண்டமணியும் செந்திலும். இவர்கள் இருவரும் இணைந்து சில படங்களில் நடித்துக் கொண்டே தனித்தனியாகவும் சில படங்களில் நடித்து வந்தார்கள். அந்த வகையில் கவுண்டமணி முன்னணி ஹீரோக்களுடன் செந்தில் இல்லாமல் தனியாக இணைந்து நடித்தார்.

செந்திலுக்கு அப்படி மற்ற ஹீரோக்களுடன் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து வேலைக்காரன், மனிதன், வீரா, படையப்பா உள்ளிட்ட பல படங்களில் தனி காமெடி நடிகராக இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் காம்பினேஷனும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு தற்போது லால் சலாம் படத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகர் செந்தில். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, “முன்பு வீரா படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் வெளிப்புற படப்பிடிப்பு நடந்தபோது செந்திலுக்கும் எனக்கும் அருகருகே அறை ஒதுக்கி இருந்தார்கள். ஆனால் இரவு நேரம் ஆன பிறகு பக்கத்து அறையில் இருந்து பழைய பாடல் ஒலிக்கும் சத்தமும் அழுகை சத்தமும் கேட்டது. யார் என சென்று பார்த்தால் அங்கே செந்தில் பழைய பாடல்களை கேட்டுக்கொண்டு சரக்கு அடித்தபடி அழுது கொண்டிருக்கிறார். அவருக்கு ஆறுதல் சொல்லியும் சமாதானப்படுத்த முடியவில்லை. ராத்திரியில் தூங்க முடியாமல் என்னுடைய அறையை வேறு ஒரு இடத்திற்கு மாற்றி சென்று விட்டேன்” என்று பழைய சுவாரஸ்ய நிகழ்ச்சி ஒன்றை பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.

Must Read

spot_img