spot_img
HomeNewsரஜினிக்காக தொடர்ந்து குரல் கொடுத்த பாடகர் மனோவுக்கு நேர்ந்த கதி

ரஜினிக்காக தொடர்ந்து குரல் கொடுத்த பாடகர் மனோவுக்கு நேர்ந்த கதி

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் உடனடியாக தெலுங்கிலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. ஒரு சில ஹீரோக்கள் மட்டுமே தங்களது படங்கள் தெலுங்கில் வெளியாகும்போது தாங்களே சொந்தமாக குரல் கொடுத்து டப்பிங் பேசி வருகின்றனர். மற்ற சில நடிகர்கள் பிஸியாக இருப்பதால் மற்ற மொழிகளின் டப்பிங் பற்றி கவலைப்படுவதில்லை.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் போதெல்லாம் அவருக்காக பின்னணி குரல் கொடுத்து பேசியவர் பாடகர் மனோ தான். இந்த நிலையில் தான் தற்போது வெளியாகி உள்ள லால் சலாம் படத்தின் தெலுங்கு வெர்சலில் இந்த முறை மனோவுக்கு பதிலாக பிரபல நடிகரும் டப்பிங் கலைஞருமான நடிகர் சாய் குமாரை ரஜினிக்காக குரல் கொடுக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இதற்கு முன்னதாக ஏற்கனவே பாட்ஷா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரஜினிக்காக குரல் கொடுத்தவர் இந்த சாய்குமார் தான். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு லால் சலாம் படத்தில் ரஜினிக்காக டப்பிங் பேசியுள்ளார். காரணம் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரம் ரொம்பவே பவர்ஃபுல் என்பதால் அதற்கு சாய் குமார் டப்பிங் பேசினால் நன்றாக இருக்கும் என ஐஸ்வர்யா நினைத்தது தான் இந்த மாற்றத்திற்கு காரணம் என்கிறார்கள்.

Must Read

spot_img