spot_img
HomeNewsகூட்டணி விஷயத்தில் சீமானுக்கு இளையராஜா போட்ட கண்டிஷன்

கூட்டணி விஷயத்தில் சீமானுக்கு இளையராஜா போட்ட கண்டிஷன்

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. இந்த தேர்தலில் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் திரையுலகப் புகழை பயன்படுத்தி கட்சி ஆரம்பித்தவர்கள் தங்களுக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஏதாவது கருணை காட்டுவார்களா என்கிற ஏக்கம் ஒரு பக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் தனது புதிய கட்சியை அறிவித்த நடிகர் விஜய் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கூறிவிட்டார். விஜயகாந்த் மறைவால் ஏற்பட்ட அனுதாபத்தால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கிறது அவரது கட்சி.

அதே சமயம் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தாலும் விஜய், விஜயகாந்த் போல ஏற்கனவே கிடைத்த புகழால் சேர்ந்த கூட்டம் என எதுவும் இல்லாமல், தன்னை பின் தொடர்ந்து வரும் உணர்வு பூர்வமான தொண்டர்களை வைத்து அரசியல் செய்து வருகிறார் நாம் தமிழர் கட்சி சீமான்.

தற்போது இருக்கும் ஒரு பெரிய கட்சியுடன் அவர் கூட்டணி வைத்தால் நிச்சயம் பல இடங்களை கைப்பற்ற முடியும். ஆனால் யாருடனும் கூட்டணி இல்லை என்று தனி ஆளாக போராடி வருகிறார் சீமான்.

மறைந்த பின்னணி பாடகி பவதாரணி மறைவு குறித்து இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்றுள்ளார் சீமான். அப்போது அவரிடம் அரசியல் பற்றி பேசிய இளையராஜா ஏதாவது கட்சியுடன் கூட்டணி வைக்க போகிறாயா என்று கேட்டுள்ளார். அப்படி ஒரு எண்ணமே இல்லை என்று சீமான் சொன்னதும், அதுதான் சரி.. யாருடனும் எப்போதும் கூட்டணி வைத்து விட வேண்டாம்.. நீ தனியாகவே எப்போதும் தேர்தலை சந்திக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தாராம் இளையராஜா

Must Read

spot_img