spot_img
HomeNewsஅந்தப்பாடல் ஹிட்டானதில் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனமில்லை ; ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரக்தி

அந்தப்பாடல் ஹிட்டானதில் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனமில்லை ; ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரக்தி

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து வை ராஜா வை தற்போது லால் சலாம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய 3 படத்தில் தனுஷ் பாடி அனிருத் இசையமைப்பில் வெளியான ஒய் திஸ் கொலவெறி என்கிற பாடல் உலக அளவில் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டது. அதே சமயம் அந்த படத்தின் பாடலால் படத்திற்கு எந்த வித பிரயோஜனமும் இல்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் விரக்தியுடன் கூறியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இதுபற்றி அவர் கூறும்போது, “கொலவெறி பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானதால் எனக்கு ஆச்சரியத்திற்கு பதிலாக அதிர்ச்சி தான் ஏற்பட்டது. காரணம் அது படத்தில் நான் சொல்ல வந்த விஷயத்தை மழுங்கடித்து விட்டது. படம் வெளியாவதற்கு முன்பும் பின்பும் பார்க்கும் அனைவருமே என்னிடம் கொலவெறி பாடலை பற்றி மட்டும் தான் பேசினார்கள். அந்த படத்திற்கு கிடைக்க வேண்டிய வெற்றியை அந்த பாடல் இருட்டடிப்பு செய்து விட்டது” என்று தான் சொல்வேன் என விரக்தியாக கூறியுள்ளார்

Must Read

spot_img