spot_img
HomeNewsவிசித்திரா சொன்னது உண்மைதான் ; உறுதிப்படுத்திய கபாலி பட கதாநாயகி

விசித்திரா சொன்னது உண்மைதான் ; உறுதிப்படுத்திய கபாலி பட கதாநாயகி

திரையுலகை பொருத்தவரை அவ்வப்போது சில ஹீரோக்கள் மீது நடிகைகள் பாலியல் ரீதியாக குற்றச்சாட்டு வைப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை விசித்திரா அங்கு பேசும்போது தெலுங்கு திரையுலகில் தான் நடித்த படத்தின் பிரபல ஹீரோவால் தான் அனுபவித்த பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குறித்து பேசி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தார்.

அவர் யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும் அவர் தெலுங்கில் நடித்த ஒரே படம் நடிகர் பாலகிருஷ்ணாவின் படம் தான். அதனால் ரசிகர்கள் அனைவருமே இது பாலகிருஷ்ணாவின் வேலை தான் என்று கூறி அவரை கழுவி கழுவி ஊற்றினார்கள்.

இந்த நிலையில் கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த பிரபலமான பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே சமீபத்திய பேட்டி ஒன்றில் எந்த திரையுலகையை மோசமானது என்று நினைக்கிறீர்கள் என கேட்ட கேள்விக்கு தெலுங்கு திரையுலகம் தான் என பளிச்சென பதில் கூறியுள்ளார். மேலும் தான் ஒரு ஹீரோவுடன் இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்ததாகவும் முதல் படத்திலேயே அவரது பாலியல் சீண்டல்கள் இருந்ததாகவும் அதையெல்லாம் ஒருவழியாக சமாளித்து நடித்ததாகவும் கூறினார்.

அதன் பிறகு மீண்டும் எப்படி அந்த அந்த ஹீரோவுடன் இரண்டாவது படத்தில் இணைந்து நடித்தீர்கள் என்று கேட்ட கேள்விக்கு சம்பந்தப்பட்ட அந்த ஹீரோவே இந்த நடிகை தான் வேண்டும் என தானே கேட்டதாகவும், சரி முதல் படத்தில் தான் அப்படி இப்படி நடந்து இருப்பார்.. இந்த படத்தில் பெரிதாக பிரச்சினை இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து தான் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஆனாலும் அவரது கல்யாண குணங்கள் எதுவும் மாறவில்லை என்றும் தெலுங்கு திரையுலகம் என்றாலே போதுமடா சாமி என்று சொல்லும் அளவிற்கு கசப்பை ஏற்படுத்தி விட்டார் என்றும் கூறியுள்ளார். இப்போது மீண்டும் பாலகிருஷ்ணா 2.0 என்பது போல அவரை ரசிகர்கள் கழுவி ஊற்ற துவங்கியுள்ளனர்.

Must Read

spot_img