spot_img
HomeNewsகமல் செய்த கதாபாத்திரத்தை நாற்பது வருடம் கழித்து செய்யப்போகும் ஜெயம் ரவி

கமல் செய்த கதாபாத்திரத்தை நாற்பது வருடம் கழித்து செய்யப்போகும் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி இளம் வயதில் சாட்டிலைட் பாய் கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் போகப்போக அப்படியே அழுத்தமான கதாபாத்திரம், சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்லும் கதை கொண்ட படங்களில் நடிக்க துவங்கினார். அதன் மூலமாக அவருக்கு பொன்னியின் செல்வன் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது.

அதை தொடர்ந்து தற்போது நடிக்கும் படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விரைவில் டைரக்சனிலும் இறங்கப் போவதாக சொல்லி வரும் அவர் யோகி பாபுவை வைத்து படம் இயக்கப் போவதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் அடுத்து ஜெயம் ரவி நடிக்க உள்ள புதிய படம் ஒன்றில் பரதநாட்டிய கலைஞராக நடிக்க இருக்கிறாராம்.

குறிப்பாக சலங்கை ஒலி படத்தில் கமல்ஹாசன் ஏற்று நடித்த கதாபாத்திரம் போன்று தான் ஜெயம் ரவியின் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஜெயம் ரவி ஏற்கனவே திறமையான நடன கலைஞர். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் சென்னை செந்தமிழ் என்கிற பாடலில் அவரது பரதநாட்டிய திறமையை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம் இந்த முழு படத்திலும் அவர் தனது புதிய நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

Must Read

spot_img