spot_img
HomeNewsசெக் மோசடி வழக்கில் அஜித் பட தயாரிப்பாளர் கைது

செக் மோசடி வழக்கில் அஜித் பட தயாரிப்பாளர் கைது

சினிமாவில் பல தயாரிப்பாளர்கள் அதிரடியாக பல வெற்றிப்படங்களை தயாரிப்பார்கள், ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து அவர்கள் தயாரிக்கும் படங்கள் ஓடாமல் அவர்களை மிகப்பெரிய கடனாளியாக மாற்றி விடும். இதற்கு பல உதாரணங்களை பார்த்திருக்கிறோம்.

தற்போது லேட்டஸ்ட் உதாரணமாக அஜித் நடித்த வான்மதி, காதல் கோட்டை உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனும் இது போன்ற ஒரு சிக்கலில் சிக்கி தற்போது செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கு பிரபல நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து இவர் தயாரித்த ஒரு படத்திற்காக தனியார் நிறுவனத்திற்கு, ஒரு கோடியே 70 லட்சம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டி இருந்தது. அதற்காக காசோலைகளை கொடுத்துள்ளார்.

பலமுறை அந்த நிறுவனம் பணத்தை திருப்பி கேட்டும் இவர் கொடுக்காததால் தற்போது அவர்மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனை தொடர்ந்து சிவசக்தி பாண்டியன் நீதிமன்ற உத்தரவுப்படி கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Must Read

spot_img