spot_img
HomeNewsசீமான் செய்ததை விஜய்யும் பின்பற்றுவார் ; பிரபல தயாரிப்பாளரின் நம்பிக்கை நிறைவேறுமா ?

சீமான் செய்ததை விஜய்யும் பின்பற்றுவார் ; பிரபல தயாரிப்பாளரின் நம்பிக்கை நிறைவேறுமா ?

அரசியல் கட்சிகளாகட்டும் சினிமா நடிகர்களாகட்டும் ஒவ்வொருவரின் தொண்டர்களும் ரசிகர்களும் தங்களது எதிர் தலைவர்களின், எதிர் நடிகர்களின் தொண்டர்களுடன் ரசிகர்களுடனும் எந்நேரமும் சோசியல் மீடியாவில் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சி சீமான் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்து தனித்துவமான அரசியல் செய்ய முயற்சித்தாலும் அவரும் அவரது தொண்டர்களும் திரையுலகில் உள்ள பல முன்னணி ஹீரோக்களை பற்றி கடுமையாக விமர்சித்ததும் சோசியல் மீடியாவில் சம்பந்தப்பட்டவர்களின் ரசிகர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்ததும் இப்போது அரசியலில் இருக்கும் சீமானுக்கு ஓட்டுக்களாக மாறுவதற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

ஆனாலும் சமீப நாட்களாக தனது பேச்சில் பக்குவப்பட்டு விட்ட சீமான் சமீபத்தில் நடைபெற்ற தனது கட்சிக் கூட்டத்தில் தனது தொண்டர்களிடம் இனி யாருடனும் தேவையில்லாமல் மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது, கடுமையான விமர்சனங்களை, தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளார். இதனால் நமக்குத்தான் சிக்கல் என்பதையும் எடுத்து கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யும் தற்போது அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். விஜய் ரசிகர்கள் எப்போதுமே சோசியல் மீடியாவில் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களுடன் சரிக்கு சரியாக நின்று மல்லுக்கட்டிக் கொண்டிருப்பார்கள்.

பொதுவாகவே தங்களது அபிமான நடிகர் அரசியலுக்கு வருகிறார்கள் என்றால் சக நடிகர்களின் ரசிகர்களும் சப்போர்ட் செய்தால் தான் தங்களால் வெற்றி பெற முடியும் என்பதை நடிகர்களும் மறந்து விடுகிறார்கள். அவர்களது ரசிகர்களும் மறந்துவிடுகிறார்கள்..

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் இதுபற்றி கேட்கப்பட்டபோது, எப்படி சீமான் அண்ணன் தனது தொண்டர்களை இப்போது அறிவுரை கூறி பக்குவப்படுத்தி உள்ளாரோ, அதேபோல விஜய்யும் தனது ரசிகர்களை இதேபோன்று யாருடனும் மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது என பக்குவப்படுத்த வேண்டும்.. நிச்சயம் அவர் செய்வார் என எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

Must Read

spot_img