spot_img
HomeNewsகேள்வி கேட்டவரை நேருக்கு நேர் வச்சு செய்த மாநகரம் நடிகர்

கேள்வி கேட்டவரை நேருக்கு நேர் வச்சு செய்த மாநகரம் நடிகர்

லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான படம் ‘மாநகரம்’. அந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் சந்தீப் கிஷன். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பிஸியான நடிகராக வலம் வருகிறார்.

சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த சந்தீப் கிஷன் தற்போது மீண்டும் தனுஷுடன் இணைந்த தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் அவரது ஐம்பதாவது படத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் இவர் நடித்துள்ள ஊரு பேரு பைரவகோனா என்கிற படம் படம் சமீபத்தில் வெளியானது.

பொதுவாக இதுபோன்று தங்களது படங்கள் வெளியாகும்போது பத்திரிக்கையாளர்களை அழைத்து பிரஸ்மீட் நடத்துவது வழக்கம் தான். ஆனால் ஒரு வித்தியாசத்திற்காக மீம்ஸ் கிரியேட்டர்களை அழைத்து ஒரு பிரஸ்மீட் நடத்தியுள்ளார்கள்.

ஜாலியாக சென்று கொண்டிருந்த இந்த சந்திப்பில் ஒரு மீம் கிரியேட்டர் சந்தீப் கிஷனுடன் இணைந்து நடித்த நடிகைகள் வர்ஷா பொல்லாமா மற்றும் காவியா தாப்பர் ஆகிய நடிகைகளை பற்றி அநாகரிகமாக இரட்டை அர்த்த தொனிக்கும் வகையில் ஏதோ கேள்விகளை கேட்டுள்ளார். இது அவரது அருகில் அமர்ந்திருந்த நடிகைகளை ரொம்பவே சங்கடப்படுத்தியது.

இதனால் டென்ஷனான சந்தீப் கிஷன் அந்த மீம்ஸ் கிரியேட்டரை பார்த்து இனிமேல் காமெடிக்கு கூட இது போன்ற கேள்விகளை எங்கேயும் கேட்கக்கூடாது. டீசன்டாக கேள்வி கேட்க கற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு காட்டு காட்டி விட்டார். நடிகைகள் என்றாலே கில்லுக்கீரை தான் என எண்ணும் போக்கு அதிகரித்து வருவதை தான் இது போன்ற நபர்களின் கேள்விகள் சுட்டிக் காட்டுகிறது.

Must Read

spot_img