spot_img
HomeNewsஇன்னும் வாய் திறக்காத இளையராஜா ; வருத்தத்தில் நூறு கோடி வசூல் படக்குழுவினர்

இன்னும் வாய் திறக்காத இளையராஜா ; வருத்தத்தில் நூறு கோடி வசூல் படக்குழுவினர்

 

மலையாளத்தில் வெளியான சின்ன பட்ஜெட் படங்கள் ஒரு சில அவ்வப்போது மிகப்பெரிய வெற்றியை பெற்று பல கோடிகளை வசூலிப்பது உண்டு. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான மூன்று படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளன. அதில் ஒன்றுதான் மஞ்சும்மேல் பாய்ஸ்.

கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள நண்பர்களில் ஒருவர் குணா குகைக்கு சென்றபோது அந்த குகைக்குள் தவறி விழுந்து விட மற்றவர்கள் அவரை எப்படி போராடி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. இந்த படத்திற்கு குணா படத்தில் இருந்து கமல் நடித்த கண்மணி அன்போடு என்கிற பாடல் காட்சியை அழகாக எடுத்து பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி இருந்தார்கள்.

குறிப்பாக இந்த பாடல் காட்சியை இந்த படத்தில் பார்ப்பதற்காகவே பலரும் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. கமல் இந்த படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார். இந்த நிலையில் இந்த ஹிட் பாடலால்தான் இந்த படம் இந்த பெருமையை பெற்றுள்ளது என்றாலும் குணாவுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜா இன்னும் படக்குழுவினரை பற்றி எந்த பாராட்டும் சொல்லவில்லை.

படக்குழுவினரும் அவரை சந்திக்கவில்லை. ஒருவேளை இந்த பாடலை காப்பிரைட் வாங்காமல் பயன்படுத்தி விட்டார்களா ? அதனால் இளையராஜா கோபமாக உள்ளாரா ? அதை சமாதானப்படுத்துவதற்காக கமல்ஹாசன் இடையில் புகுந்து விட்டதால் வேறு வழி என்று அமைதி காக்கிறாரா என்பது போன்ற பல கேள்விகள் சோசியல் மீடியாவில் உலா வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img