spot_img
HomeNewsதந்தையின் பாணியில் தனது திருமணத்தை முடிவு செய்த வரலட்சுமி

தந்தையின் பாணியில் தனது திருமணத்தை முடிவு செய்த வரலட்சுமி

சினிமாவில் நடிகைகளை பொறுத்தவரை அதிலும் தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் எப்போது திருமணம் செய்து கொள்கிறார்கள், யாரை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது பெரும்பாலான நேரங்களில் சஸ்பென்ஸ் ஆகவே இருக்கும். சிலருடன் நெருக்கமாக பழகி வருவார்கள்.. இவரைத்தான் காதலிக்கிறாரோ, இவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரோ என நினைக்கும் போது திடீரென எனது நீண்ட நாள் நண்பர் என்று கூறி வடநாட்டிலிருந்து ஒருவரை அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டு அதிர்ச்சி தருவார்கள்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை சிம்ரன், கமலுடன் நடித்த சமயங்களில் அவருடன் காதல் வயப்பட்டிருந்தார் என்றும் பின்னர், டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரத்துடன் காதலில் விழுந்தார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. அந்த நிலையில் தான் திடீரென தனது நீண்ட நாள் தோழரான தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தார் சிம்ரன்.

தற்போது லேட்டஸ்டாக நடிகை வரலட்சுமி வடநாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இவர்கள் இருவரும் 11 வருடங்களாக நெருங்கி பழகி வருகிறார்கள். அதேசமயம் சினிமாவைப் பொறுத்தவரை விஷாலும் வரலட்சுமியும் நெருங்கி பழகி வந்ததால் அவர்கள் இருவரும் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஷால் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் நடந்த போது இவர்களுக்குள் காதல் இல்லை என்பது வெளிப்படையாக தெரிய வந்தது. இந்த நிலையில் வரலட்சுமி தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்கிறார் என்று சொன்னாலும் கூட அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் அவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் கூட சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இன்னும் சிலர் வரலட்சுமியின் தந்தை சரத்குமார், நடிகை ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டபோது ஏற்கனவே அவருக்கு வளர்ந்த ஒரு மகள் இருந்தார் என்று குறிப்பிட்டு, வரலட்சுமியும் இப்போது தந்தையை போன்றே வளர்ந்த மகள் உள்ள ஒரு நபரை திருமணம் செய்து கொள்கிறார் என்று கிண்டலடித்து வந்தனர்.

இதனால் ஆவேசமான வரலட்சுமி, “என்னை பற்றி யார் என்ன விமர்சித்தாலும் நான் கவலைப்பட போவதில்லை. நீங்கள் உங்களுக்காக வாழுங்கள். இதை செய்யாதே, அதை செய்யாதே என்று சொல்பவர்கள் யாரும் நம்முடைய வாழ்க்கை முழுவதும் பயணிக்க போவதில்லை” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img