spot_img
HomeNewsதேர்தல் தேதி அறிவித்ததுமே முதல் ஆளாக குரல் கொடுத்த ஜெயம் ரவி ; எதற்காக தெரியுமா...

தேர்தல் தேதி அறிவித்ததுமே முதல் ஆளாக குரல் கொடுத்த ஜெயம் ரவி ; எதற்காக தெரியுமா ?

இந்தியாவே, குறிப்பாக நம் தமிழகத்திலும் ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்து வந்த பாராளுமன்றத் தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டு விட்டது. ஒரு பக்கம் பிரதான கட்சிகள் தங்களுடன் கூட்டணி கட்சிகளை சேர்த்து தனித்தனி அணியை உருவாக்கி யாருக்கு எந்த தொகுதி என பிரித்து வருகின்றன. மக்கள் பலரும் இந்த தேர்தலில் நமக்கு எந்த கட்சி ஓட்டுக்கு எவ்வளவு தரும் என்கிற நினைப்பில் இப்போது இருந்தே காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இன்னும் சிலரும் யாருக்கு ஓட்டு போட்டு என்ன ஆகப் போகிறது என வழக்கம் போல மெத்தனமாக இருப்பார்கள் என்பதையும் மறுக்க முடியாது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே நடிகர் ஜெயம் ரவி இது குறித்து அதிரடியான ஒரு ட்வீட் வெளியிட்டார்.

அதில் அவர் என்ன சொன்னார் என்றால், “வரப்போகிற மக்களவைத் தேர்தலில் நமது நாட்டின் அனைத்து இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த தேர்தலில் நீங்கள் சரியான வேட்பாளருக்கு வாக்களித்து உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இவருடைய அக்கறையான இந்த பதிவு அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img